ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சிக்கல்.. பாகிஸ்தான்  எடுத்த  முடிவு.. துபாயில் நடைபெறும் புதிய தொடர்.. விவரம்

0
237

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது இந்த சூழலில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முறித்துக் கொண்டது.

இந்த நிலையில் இனி சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் இந்தியா, பாகிஸ்தான் உடன் விளையாடாது என தெரிகிறது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான் இல்லாமல் நடைபெறாது என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. ஒருவேளை இன்று தொடர் நடைபெற்றால் கூட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது.

- Advertisement -

முத்தரப்பு தொடருக்கு ஏற்பாடு:

இதனால் ஹைபிரிட் மாடல் முறைப்படி பாகிஸ்தான் விளையாடும் போட்டி இலங்கை அல்லது துபாயில் நடைபெறும். இந்த தொடருக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இதுவரை எந்த ஒரு செய்தியும் இது தொடர்பாக வெளியாகவில்லை.

இந்த தருணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முத்தரப்பு தொடர் ஒன்றில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் மோதும் இந்த முத்தரப்பு தொடர் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பைக்கு சிக்கல்:

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஆசிய கோப்பை தொடரையே நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: சச்சின், கோலியை விட நீங்க பெரிய வீரரா? சுப்மன் கில் மீது ரசிகர்கள் விமர்சனம்.. பேட்டால் வந்த சர்ச்சை

மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் வேறு ஒரு மைதானங்களில் விளையாடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என தெரிகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இருதரப்பு  தொடரில் மோதியது கிடையாது. இரு அணிகளும் தங்களுக்குள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -