ஓபனா சொல்றேன். தோனி விராட் கிடையாது.. கேப்டனா ரோகித்தான் அந்த விஷயத்துல அதிகம் உழைப்பாரு – அஸ்வின் கருத்து

0
51
Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் தான் விளையாடிய மூன்று கேப்டன்களில் ரோகித் சர்மாதான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மிக அதிகமாக கேப்டனாக உழைக்கக் கூடியவர் என மிக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி கேப்டன்ஷியில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கடுத்து விராட் கோலி கேப்டன்ஷியல் விளையாடி தற்பொழுது ரோகித் சர்மா கேப்டன்ஷியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதில் பெரும்பாலும் கேப்டனாக ரோஹித் சர்மாவின் அணுகுமுறையே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிகம் பிடித்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

தோனி கொடுத்த வாய்ப்பு

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த இரண்டாவது வருடம் சிஎஸ்கே அணிக்குள் நுழைந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகப்பெரிய வாய்ப்பை தந்த கேப்டனாக தோனி இருக்கிறார். அவரது தலைமையில் தான் முதல் ஓவரையே ரவிச்சந்திரன் அஸ்வின் வீச முடிந்தது. இது அவருக்கு பல வகையில் நம்பிக்கை தந்ததாக அவரை கூறி இருக்கிறார்.

மேலும் அங்கு அவரது திறமையை புரிந்து கொண்ட மகேந்திர சிங் டோனி அதற்கு அடுத்து அவரை இந்திய அணிக்கும் கொண்டு சென்றார். தன்னுடைய கேப்டன்சி காலத்தில் மூன்று வடிவ இந்திய கிரிக்கெட்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தான்.

- Advertisement -

ரோகித் சர்மாதான் சிறந்தவர்

இந்த நிலையில் ரோகித் சர்மா பற்றி பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஏதாவது பெரிய தொடர் அல்லது பெரிய போட்டி வந்தால் ரோஹித் சர்மா உடனடியாக அனலைஸ்ட் குழுவுடன் வந்து இணைந்து கொள்வார். ஒரு பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து பந்துவீச்சாளருக்கு திட்டம் வகுத்துக் கொடுப்பார். இது அவருடைய பெரிய பலம்.

ஒரு வீரரை பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா தேர்ந்தெடுத்து விட்டால் அவரை 100% நம்புவதுடன் ஆதரிக்கவும் செய்வார். நான் என்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகப் பெரிய பகுதியை மூன்று கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன்.

இதையும் படிங்க : இந்திய டீமின் கோச் பதவி எனக்கு வேணவே வேணாம்.. அந்த 15 வருஷம் தான் காரணம் – சேவாக் பேட்டி

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இரண்டு மூன்று விஷயங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் எப்பொழுதும் அணியை மிகவும் இலகுவாக வைத்திருக்கிறார். மேலும் அணி சமநிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார். திட்டங்கள்வகுப்பதில் வல்லவராக இருக்கிறார். இந்த விஷயத்தில் தோனி மற்றும் விராட் கோலி கேப்டனாக சிறந்தவர்களாக இருந்தார்கள். ஆனாலும் திட்டங்கள் வகுப்பதில் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகம் உழைக்கக் கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -