தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா விலகிக் கொள்ள இருக்கிறார் என்கின்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தன்னுடன் அந்த அணியில் கேப்டனாக பணியாற்றிய ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாதது ஆச்சரியமாக இல்லை என்று அவர் பேசியிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்காமல் கழட்டி விட்டது. இது ஹர்திக் பாண்டியாவை மிகவும் பாதிப்படைய வைத்த ஒரு விஷயமாகவும் இருந்தது. அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய நண்பர் கேஎல்.ராகுல் கேப்டனாக வரப்போகும் லக்னோ அணிக்கு வீரராக சென்று விடத்தான் நினைத்திருக்கிறார்.
அப்படியான சூழ்நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஆக்குவதாக உறுதியளித்ததோடு, அவரை களத்தில் வெற்றிகரமான கேப்டனாகவும் வைத்திருந்தார். முதல் ஆண்டே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்கள். இப்படியான நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு ஹர்திக் பாண்டியா இந்த வருடம் மும்பை அணிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணிகள் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாதது குறித்து பேசும் பொழுது “கிரிக்கெட் என்று வரும்போது இப்படி நடப்பதெல்லாம் ஆச்சரியப்படக்கூடியதாக இல்லை. நீங்கள் சொன்னது போல எனக்கு டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதுதான் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.
அதேநேரத்தில் ஒரு புதிய பயிற்சியாளர் வருகிறார். அப்பொழுது ஒரு புதிய சிந்தனையும் வருகிறது. மேலும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு எண்ணம் வருகிறது.மேலும் ஹர்திக் பாண்டியாவை ஏன் கேப்டனாக கொண்டு வரவில்லை என அஜித் அகர்கர் கூறியிருந்தார். நான் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி பற்றி தவறாக சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது அவர் ஒரு ஃபார்மெட்டில் மட்டும்தான் விளையாடுகிறார். 50 ஓவர் போட்டியில் கூட அதிகம் விளையாடுவது இல்லை. இங்கு எண்ணங்கள் வேறுபட்டவைகளாக எல்லோருக்கும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : பயிற்சியில் ஹர்திக் பாண்டியா அபிஷேக் நாயர் பிரச்சனை.. தீர்த்து வைத்த பத்திரிக்கையாளர்.. களத்தில் என்ன நடந்தது?
இலங்கைக்கு எதிராக நாளை மறுநாள் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.