ராஜஸ்தான் செஞ்சது ரொம்பவே ஆச்சரியம்.. தரமான ஒரு பிளேயரை வெளியே விட்டா எப்படி ஜெயிப்பீங்க – அனில் கும்ப்ளே கேள்வி

0
285

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிக்கலில் தத்தளிக்கும் ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த தொடரில் வலுவாக இருக்கும் பெங்களூர் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அந்த மூன்றிலும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய போட்டிகள் ஆகும்.

இன்றைய போட்டியும் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பெறும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் முந்தைய சீசன்களில் வலுவாக இருந்த ராஜஸ்தான் அணி இந்த முறை முன்னணி வீரர்களான பட்லர், போல்ட், அஸ்வின் போன்ற வீரர்களை தக்க வைக்காமல் வெளியே விட்டதன் விளைவாக 8 போட்டிகளில் விளையாட இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 6ல் தோல்வியை தழுவியுள்ளது. இந்த சூழ்நிலையில் பட்லரை தக்க வைக்காதது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கும்பளே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு ஆச்சரியமாக உள்ளது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜோஸ் பட்லர் சிறிது காலம் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்தார். எதிர் அணியை சேதப்படுத்தியதில் அவர் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார். ராஜஸ்தான் அணி அவரை தக்கவைக்காதது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் வைத்திருக்கும் அணியை பொறுத்தவரை மேலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க:தோனி பற்றி தேவையில்லாம பேசிய அமித் மிஸ்ரா.. சேவாக் தந்த மாஸ் பதில் – சுவாரசியமான சம்பவம்

அது நடக்கக்கூடிய ஒன்றுதான். பல அணிகளுக்கு இது போன்ற நடந்துள்ளது நீங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்து எதிர்பாராத விதமாக தோல்வியை சந்திப்பீர்கள். அவர்கள் அதை மதிப்பட வேண்டிய ஒன்று என்று நான் நம்புகிறேன். அவர்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியாது என்பதல்ல, போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்லும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். சில அணிகள் அந்த சூழ்நிலைகளிலிருந்து வெற்றி பெறும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -