நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கணித்திருப்பது பலரையும் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹேமங் பதானி பயிற்சியிலும் அக்சர் படேல் தலைமையிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. மெகா ஏலம் முடிந்ததுமே டெல்லி அணி மிகவும் வலிமையாக இருப்பதாக பலராலும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
தற்போதைய புள்ளி பட்டியல் விபரம்
நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் தலா எட்டு போட்டியில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகள் உடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மேலும் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா எட்டு போட்டியில் விளையாடி அதில் 5 வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. லக்னோ அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து ஆறாவது இடத்தில் இருக்கிறது. இருந்து நான்கு அணிகள் விளையாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
அம்பதி ராயுடுவின் ஆச்சரிய கருத்து
இப்படியான நிலையில் வெறும் 8 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகள் எடுத்துவிட்ட டெல்லி அணி மேற்கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என அம்பதி ராயுடு கணித்திருப்பது ஆச்சரியத்தை உண்டு செய்திருக்கிறது. இத்துடன் டெல்லி அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எல்லா இடங்களுக்கும் சரியான வீரர்களுடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. அடுத்த கிறிஸ் கெயில் அர்ஜுன் டெண்டுல்கர் தான்.. இது மட்டும் நடந்த போதும் – யோக்ராஜ் சிங் பேட்டி
இதுகுறித்து அம்பதி ராயுடு கருத்து தெரிவித்திருந்தபொழுது டெல்லி கேப்பிட்டல் அணி மேற்கொண்டு முன்னேறாது எனவும், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் என இந்த நான்கு அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்றும் கூறியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது!