“நாட்டுக்காக விளையாட வெளிநாட்டு டி20 லீக்ச தியாகம் பண்ண தயார்.. இந்தியா கூட விளையாட என்கிட்ட யாரும் பேசல” – ஆண்ட்ரே ரசல் அதிரடி பேச்சு

0
698
Russel

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் தற்பொழுது முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வர அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் தோற்று வெளியேறிய காரணத்தினால், இந்த தொடருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைவாகவும் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் இதற்கு முன்பு கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதி சுற்றிலும் தோற்று அந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள குளறுபடிகள், இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட ஆர்வம் இல்லாமல் இருப்பது, மேலும் வெஸ்ட் இண்டீஸ் இளைஞர்கள் என் பி ஏ மாதிரியான கூடைப்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது போன்றவை வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட இருக்கிறது. இவை இரண்டும் அருகருகே இருக்கும் நாடுகள் ஆகும். எனவே இந்த டி20 உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான் திரும்ப வர விரும்புவதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரசல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“நான் இப்பொழுது தயாராக இருக்கிறேன். நான் அடுத்த டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் என்னை அணியில் ஒரு வீரராக சேர்த்தால் அது விசேஷமான ஒன்றாக இருக்கும்.

எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நான் அதற்கு முன்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஏதாவது டி20 தொடர்களில் விளையாட விரும்புகிறேன். நான் எடுத்ததும் உலக கோப்பையில் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவில்லை.

இதில் எல்லா விஷயங்களும் எப்படி செயல்படும் என்று எனக்குத் தெரியும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட நான் இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். நான் அதை செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன்.

நான் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். ஆனால் என்னிடம் இது குறித்து யாரும் பேசவில்லை. நான் என்னுடைய சொந்த வேலைகளை மட்டுமே கவனித்து வருகிறேன். நான் வழக்கமாக என்ன பயிற்சி செய்கிறேனோ அதை செய்து கொண்டு அதை இன்னும் கடினமாக செய்து கொண்டு இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!