“வெற்றிக்கு எல்லா பெருமையும் ஒருவருக்குதான்.. அவர் நம்பிக்கைதான் காரணம்” – மெக்கலம் பேச்சு

0
60
McCullam

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டுகளில் ஜோ ரூட் தலைமையில் நிறைய தோல்விகள் வந்தது. வெளிநாடுகள் என்று இல்லாமல் உள்நாட்டிலும் தோல்விகளை சந்தித்தார்கள்.

இதன் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் புது இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்த ஜோடி இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு போல தட்டையான ஆடுகளங்களை அமைக்க வைத்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவது போலவே டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாடுவது என முடிவு செய்தது.

இவர்களது அதிரடியான முடிவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புது மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தற்பொழுது எல்லா அணிகளும் இவர்களை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக ஒன்று இரண்டு வீரர்களையாவது அப்படி விளையாடுவதற்கு அணியில் வைக்கிறார்கள்.

மேலும் இந்தக் கூட்டணியின் பெரிய சாகச வெற்றியாக இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றி அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் குறைந்து பிரமிப்பு அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் வெற்றி குறித்து பயிற்சியாளர் மெக்கலம் பேசும் பொழுது “பென் ஸ்டோக்ஸ் டாம் ஹார்ட்லியை தேர்ந்தெடுத்த பொழுது மக்கள் எல்லோரும் சந்தேகமாகப் புருவத்தை உயர்த்தினார்கள். ஆனால் அது பொருத்தமான விஷயமாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவர் 40 சராசரியில் உள்நாட்டில் சில போட்டிகள் மட்டுமே விளையாடி இருந்தார். ஆனால் அவர் சர்வதேச அளவில் சிறந்த சாதனையை படைத்திருக்கிறார்.

உங்களுடைய திட்டத்திற்கு மற்றும் சூழலுக்கு ஒரு வீரர் சரிப்பட்டு வருவார் என்று தெரிந்தால், அவரை நீங்கள் நம்பி ஆதரிக்க வேண்டும். அவர் இந்திய சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் முதல் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் என்பது பெரிய விஷயம்.

இதையும் படிங்க : “சர்ப்ராஸ் கான் வாய்ப்பை வீணடிக்க முடியாது.. காரணம் விராட் கோலி இருக்கார்” – ஹர்பஜன் சிங் பரபரப்பு பேச்சு

டாம் ஹார்ட்லியை தேர்ந்தெடுத்தது கேப்டனின் சிறந்த முடிவு என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் கேப்டன்ஷியில் அருமையாக இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் டாம் ஹார்ட்லியை நீண்ட ஸ்பெல்லுக்கு பயன்படுத்திய விதம் தைரியமான ஒன்று. இது அணியை சுற்றி எல்லோருக்கும் நம்பிக்கையும் தைரியத்தையும் கொடுப்பதற்கான செய்தி. எங்காவது தவறு நடந்தால் யாரும் அணியிலிருந்து ஒதுக்கப்பட நீக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.