தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ள டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து பயிற்சியாளராக இணைய இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மோர்கலின் சகோதரரான முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அல்பி மோர்கல் மோர்னே மோர்க்கல் குறித்து சில முக்கிய தகவல்களை கூறி இருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கு பிறகு ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழு தற்போது நியமிக்கப்பட்டு வருகிறது. இதில் கௌதம் கம்பீருக்கு உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரின் போது இந்திய அணியோடு இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கம்பீரோடு இணைந்து பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மோர்னே மோர்கல் இணைய போவதை தொடர்ந்து அவரது சகோதரர் அல்பி மோர்கல் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அவர் விரிவாகக் கூறும்போது “இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதனைப் பயிற்சியாளர் வேலை என்று சொல்ல வேண்டியது இல்லை. விளையாட்டின் மீதான ஈடுபாடு மற்றும் கடந்த காலங்களில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் ஆகியவை எந்த ஒரு தவறுக்கும் இடமில்லாமல் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மோர்னே மோர்கல் இந்திய அணியில் நிறைய சாதித்த நல்ல வீரர்களால் சூழப்பட்டு இருக்கிறார்.
அதனால் அவரைப் பொறுத்தவரை நான் நினைக்கக் கூடிய விஷயம் இந்திய வீரர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மற்றும் நாள் முழுவதும் அவர்களது முழு செயல்திறனையும் வெளிக் கொண்டு வர உதவினாலே சிறப்பாக இருக்கும். நான் எனது சகோதரருடன் நிறைய வேலை செய்ததில்லை என்றாலும் பந்து வீச்சாளர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளில் விளையாடி அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது.
இதையும் படிங்க:முதல் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இலங்கை அணிக்கு வந்த வினோத பிரச்சனை
அவர் தனது அனுபவத்தை பயிற்சியின்போது பயன்படுத்தினால், அதன் மூலம் சிறந்த வழிமுறைகளை கண்டறிந்தால் நிறைய நன்மதிப்பை அணிக்குச் சேர்ப்பார்” என்று கூறி இருக்கிறார். அல்பி மோர்கல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இரண்டு முறை சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.