இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பேசிய கருத்துக்கு இங்கிலாந்து லெஜெண்ட் அலைஸ்டர் குக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயத்தின் காரணமாக ஆஸ்திரேலியா வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக ஹாரி புரூக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கோட்டை விட்ட இங்கிலாந்து அணி
நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 32 ஓவரில் 200 ரன்கள் தாண்டி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. எனவே எப்படியும் 350 ரன்கள் தாண்டி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் அந்த அணி அதிரடியாக விளையாடுகிறேன் என்று ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை கொடுத்து 315 ரன்களுக்கு அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்கார டிராவீஸ் ஹெட் அதிரடியாக 129 பந்தில் 154 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்ல வேண்டிய போட்டியை இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடுகிறேன் என்று கோட்டை விட்டது.
ஹாரி புரூக் சர்ச்சை பேச்சு
நேற்று தோல்விக்கு பின் பேசியிருந்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் “நாங்கள் ரன்களை எடுப்பதற்கு அதிரடியாக விளையாடுகிறோம். இதன் காரணமாக நாங்கள் அடித்து விளையாடும் பவுண்டரி எல்லையில் ஆட்டம் இழக்கலாம். இதற்காக நாங்கள் கவலைப்பட முடியாது. இன்று கேட்ச் ஆன பந்து நாளை சிக்ஸர் ஆக மாறும்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க :
இதுகுறித்து விமர்சித்த அலைஸ்டர் குக் கூறும் பொழுது ” ஹாரி புரூக் கேப்டனாக இருப்பதற்கு இன்னும் சில காலம் கிடைத்தால், இன்று அவர் பேசிய பேச்சுக்கு நிச்சயம் மோசமாக வருத்தப்படுவார். வீரர்கள் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆவது பற்றி அவர் மோசமான முறையில் பதில் சொல்லி இருந்தார். அது மிகவும் தவறான போக்கு. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் ஆட்டத்தில் பொறுப்பாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிரடியாக விளையாடுகிறேன் என்று இப்படி விக்கெட்டை கொடுக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.