மும்பை அணியில் இருந்த அந்தப் பிரச்சனையும் போக்கியாச்சு.. மற்ற ஐபிஎல் அணிகள் ஜாக்கிரதை.. எச்சரிக்கை விடும் ஆகாஷ் சோப்ரா

0
292

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் நிலையில் இன்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஹைதராபாத் மும்பை மோதல்

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன. தொடக்கத்தில் மும்பை அணி வலுவான வீரர்களை பெற்றிருந்த போதிலும் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்மில் இல்லாதது மற்றும் பும்ரா இல்லாதது என அந்த அணி பலவீனமாக இருந்தது. அதனால் முதலில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் பும்ரா காயம் குணமடைந்து மீண்டும் அணிக்குள் வர மும்பை அணி வெற்றிகளை தேட ஆரம்பித்தது.

மேலும் கடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் பார்முக்கு திரும்ப, மும்பை அணியால் தற்போது எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மும்பை அணியில் இருந்த பிரச்சனைகள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சூரியன் மறைகிறது மும்பை இந்தியன்ஸ் பறக்கிறது. கடந்த போட்டியில் சென்னை அணியை அவர்கள் வீழ்த்தியுள்ளனர். ரோகித் சர்மாவும் தற்போது ஃபார்முக்கு வந்துள்ளார். திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஏற்கனவே ஃபார்மில் இருக்கின்றனர். ரியான் வில் ஜாக்ஸ் நன்றாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சில கேமியோக்கள் விளையாடுகிறார்.

இதையும் படிங்க:174 ரன்.. தோற்றது பங்களாதேஷ் வென்றது ஜிம்பாப்வே.. ஆனால் சிக்கியது பாகிஸ்தான் அணி.. சுவாரசிய சம்பவம்

போல்ட் தற்போது நன்றாக இருக்கிறார் அவர் ஆட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் பந்து வீசி வருகிறார். பும்ரா சூடாக இருக்கிறார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பலமானதாக இருக்கிறது. இப்போது இந்த அணியில் பலவீனம் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனை உள்ளது என்று எதுவும் சொல்ல முடியாது. ரோகித் சர்மா ஒரு தொடக்க வீரராக ரன்கள் எடுக்க வில்லை என்கிற பிரச்சனை இருந்தது. அவரும் தற்போது நன்றாக விளையாட ஆரம்பித்த உடன் விஷயங்கள் முற்றிலும் சீராகி தற்போது அணி நல்ல நிலையில் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -