இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி துவங்க உள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் என மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் தேர்வு செய்யப்படவில்லை. அபிஷேக் ஷர்மா மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகுமார் யாதவ் உறுதி
இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட கேப்டன் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் அபிஷேக் சர்மா உடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்று உறுதி அளித்திருக்கிறார். புதிய துவக்க ஜோடியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்து பார்ப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவார். எதிர்முனையில் அபிஷேக் சர்மா இருப்பார். ருதுராஜ் இரானி கோப்பையில் விளையாட சென்று விட்டார். எனவே இனி எஞ்சி இருப்பது சஞ்சு சாம்சன் மட்டுமே. எனவே அவர் துவக்க ஆட்டக்காரராக வருவார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்று முதல் ஆறு இடங்களில் விளையாடியும் நாம் பார்த்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
விராட் ரோகித் இடத்துக்கு கம்பீர் வேறு யோசனை
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா “சாம்சன் நம்ப முடியாத அளவுக்கு வலிமையான வீரர். அவர் சாட்ஸ் விளையாடும் பொழுது நமக்கு அதை மிகவும் எளிதானதாக காட்டக் கூடியவர். அவருடைய ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர் நிறைய ஷாட் விளையாட தொடர்ந்து செல்வார். இதனால்தான் அவர் அவுட் ஆகி விடுகிறார். ஆனால் தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதை அவர் விட்டு விடக்கூடாது”
இதையும் படிங்க : மகளிர் டி20 உலக கோப்பை.. இனி சிக்ஸ் மழைதான்.. ரிசல்ட்ட பார்ப்பிங்க.. இந்திய அணிக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை
“விராட் ரோகித் இருவரும் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால், தற்போது முதலிடம் மட்டுமே காலியாக இருக்கிறது. இந்த இடத்திற்கு கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா என நிறைய போட்டி இருக்கிறது. தற்பொழுது இதில் சாம்சனும் இணைந்திருக்கிறார். இவரையும் இனி துவக்க வீரராக பார்ப்பதற்கு கம்பீர் முயற்சி செய்கிறார். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.