இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து புதிய இந்திய அணியை உருவாக்கிய கேப்டன் சவுரவ் கங்குலி என்று கூறுவார்கள். ஆனால் இதை மறுத்து ஆகாஷ் சோப்ரா புதிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முறையில் ஆதரவளித்து வளர்த்து வருகிறார் என்று எல்லோருமே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா இவர்கள் யாரும் செய்யாத வேலையை செய்தவர் மகேந்திர சிங் தோனி என தெரிவித்திருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி
2007 ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு அதுவரையில் கேப்டன் பொறுப்பிலே இல்லாத தோனி கேப்டனாக சென்று கோப்பையை கைப்பற்றி வந்தார். இதற்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு சீனியர் வீரர்களுடன் இணைந்து இந்தியாவின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றினார்.
இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என இரண்டு தரப்பையும் வைத்து உலக கோப்பையை வென்று யாரும் செய்ய முடியாத சாதனையை செய்திருக்கிறார். இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி இளம் வீரர்களை மிகவும் சிறப்பாக முன் நின்று வளர்த்தி புதிய இந்திய அணியை உருவாக்கியவர் என ஆகாஷ் சூப்பரா கூறியிருக்கிறார்.
சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனியாகத்தான் இருக்க முடியும். அவர் 2007 ஆம் ஆண்டு இளம் வீரர்களுடன் சென்று டி20 உலக கோப்பையை வென்றார். மேலும் அந்த உலகக் கோப்பை சச்சின் பாஜிக்கு கடைசி உலக கோப்பை. எனவே அந்த நேரத்தில் அவர் சிறந்தவராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் பாகிஸ்தான் அணியை மட்டும் வீழ்த்தல.. ரோகித் இந்த விஷயத்துல எச்சரிக்கையா இருங்க – சுனில் கவாஸ்கர் அறிவுரை
தோனி செய்த முக்கிய மாற்றம் என்னவென்றால் அவர் மற்றவர்களை முன்னிறுத்தினார். அவன் எப்பொழுதுமே தன்னை பின்னால் வைத்துக் கொள்ளக் கூடியவராகவே இருந்தார். பலரும் இப்படியான வேலைகளை செய்ய மாட்டார்கள். தோனி எப்பொழுதும் அவர்களுடைய திட்டத்தில் செல்ல அனுமதித்தார் அதே சமயத்தில் அது சரிவராத பொழுது மட்டுமே தன்னுடைய யோசனையை கூறுவார். இதனால்தான் இப்பொழுதும் இளம் வீரர்கள் அவருடைய தலைமையில் விளையாடுவதற்கு விரும்புகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.