3 வருடங்களுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தியை ஏன் எடுத்திங்க?.. நான் வாய்ப்பு தரமாட்டேன் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
525
Varun

இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வருண் சக்கரவர்த்திக்கு ஏன் இடம் தர வேண்டும்? எனவும், பிளேயிங் லெவனில் அவருக்கு ஆரம்பத்தில் தான் வாய்ப்பு தரமாட்டேன் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேடில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி தேர்வானார். அதற்குப் பிறகு அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று வருடங்களாக வெளியில் இருந்து வருகிறார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி செய்த மாஸ் மாற்றம்

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வரும் சக்கரவர்த்தி கடந்த ஆண்டில் தன்னுடைய லென்த் மற்றும் வேகத்தில் ஒரு சில மாறுதல்களை செய்தார். இதற்குப் பிறகு அவருடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக மாறியது. இதன் காரணமாக இருபதாவது ஓவரை கூட கேப்டன் நம்பி தரக்கூடிய அளவுக்கு தாக்கத்தை செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ரொம்ப சிம்பிள் ஒரு வீரரை மூணு வருஷம் கழிச்சு எதுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க? அவர விளையாட வைக்கவே கூட்டிட்டு வந்து இருக்கீங்க. அப்படினா அவரை நீங்க விளையாட வைக்கணும்? ஆனா யாருக்கு பதில் விளையாட வைக்கிறது? என்பதில் ஒரு குழப்பம் இருக்க செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான் இடம் தர மாட்டேன்

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “மேலும் இந்திய டி20 அணியின் திட்டத்தில் ரவி பிஸ்னாய் நீண்ட நாட்களாக இருந்து வருகிறார். அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வாக விட்டாலும் கூட, அவர் முன்னணியில் இருக்கிறார். எனவே அவருடன் சேர்த்து வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாட வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி குறைத்துக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : சிறந்த கேப்டன் தோனியா ரோகித்தா?.. ஷிவம் துபே தெறி பதில்.. ரோகித் சர்மா ஆச்சரியம் – சுவாரசிய நிகழ்வு

“ரவி பிஸ்னாய் விளையாடுவார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் சேர்ந்து விளையாடினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் வருண் சக்கரவர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. என்னுடைய அணியாக இருந்தால் நான் முதலில் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு கொடுப்பேன். வருண் சக்கரவர்த்தியை முதலில் விளையாட வைக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -