கம்பீர் பயிற்சியாளர்.. ரோகித் கோலி எதிர்காலம் அவ்வளவுதானா?.. 2024 டு 2027 சவால்கள் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
427
Gambhir

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஏறக்குறைய கவுதம் கம்பீர் வர இருப்பது உறுதியாக இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

தற்பொழுது இந்திய அணியின் மூத்த வீரர்களாக 35 வயதை தாண்டி ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருக்கிறார்கள். மிகப்பெரிய வீரர்களான இவருக்கு மாற்று வீரர்களை கண்டறிய வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவது கடினம். மேலும் மாறிவரும் டி20 கிரிக்கெட் ஏற்றவாறு அதிரடியான அணியை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. கம்பீர் தடாலடியாக தைரியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நபர். எனவே நிச்சயமாக குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் கம்பீர் ரோகித் மற்றும் விராட் கோலியை வெளியே அனுப்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் அது ஒரு சுவாரசியமான பதவிக் காலமாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் மாற்றத்தை நிர்வகிக்க வேண்டும். அது எப்பொழுதும் எளிதான விசயம் கிடையாது.

- Advertisement -

ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது டி20 ரோல் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் 30 வயதில் இருந்து 37 வயதுக்கு இருக்கிறார்கள். இந்த இடத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதையும் படிங்க : பாக் வீரர்கள் பற்றி கிரிஸ்டன் சொன்ன குற்றச்சாட்டு உண்மை.. ஆதாரம் இருக்கு – அகமத் சேஷாத் தகவல்

அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 2027 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வரும்பொழுது அதற்கு நீங்கள் ஒரு அணியை தயார் செய்ய வேண்டும். மேலும் 2027 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருக்கும். மேலும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடக்கும். எனவே இதற்கு எல்லாம் சேர்த்து இப்பொழுதே செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். எனவே கம்பீருக்கு வேலை எளிதானதாக இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -