108 பந்து 0 விக்கெட்.. ஏமாற்றிய பாக் நட்சத்திரம்.. 3 மணி நேரத்துல இந்த மாதிரி நடக்கும்னு நாங்க நினைக்கவே இல்லை- அசார் மஹ்மூத் பேட்டி

0
989

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டு அணிகளும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆடுகளத்தின் தன்மை குறித்து பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மஹ்மூத் ஆடுகளம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கிடையே கடந்த 21ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.இதில் டாஸ் வென்று முதலில் வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஷகீல் மற்றும் ரிஷ்வான் ஆகியோரின் அபார பேட்டிங் மூலம் முதலில் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வங்கதேச அணி பேட்டிங் களம் இறங்கியது. தனது சொந்த மைதானத்திலும் பாகிஸ்தான் அணியை விட பலம் குறைந்த வங்கதேச அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தவும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களே சற்று தடுமாறினார்கள். தற்போது வரை மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளர் அசாத் மஹ்மூத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடதற்கு காரணம் ஆடுகளத்தில் புல் இருந்ததால் வேகபந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் முதல் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக ஆடுகளத்தில் நன்றாக வெயில் அடித்து ஆடுகளம் காய்ந்து போய் இருக்கலாம். ஆடுகளம் சீக்கிரமாக காய்ந்து போனது.

அது இவ்வளவு சீக்கிரமாக காய்ந்து விடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. ஆடுகளத்தை பார்க்கும் போது வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அப்படி இந்த ஆடுகளம் நடந்து கொள்ளாததற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆடுகளத்தை கணித்ததில் நாங்கள் தவறு செய்யவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாங்கள் விளையாடவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் தோனி பேட்களை விட.. அதிக விலைக்கு ஏலம் போன கோலி ஜெர்சி.. கேஎல் ராகுலின் உன்னத செயல்

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 93 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், முஸ்பிகுர் ரஹீம் 55 ரன்களுடனும், ரிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான சாகின் ஷா அப்ரிடி 18 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 55 ரன்கள் விட்டு கொடுத்து தடுமாறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் வீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -