பாக் டீம ஜெயிச்ச மாதிரி.. இந்தியாவ ஜெயிக்கணும்னா நாங்க இந்த விஷயத்துல கூடுதல் கவனம் செலுத்தணும் – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி

0
507
Team india and Najmul hossain shanto

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ தோல்வி குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையோடு இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வங்கதேச அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மோசமான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்திய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு நன்றாக பேட்டிங்கில் செயல்பட்டது.

ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஓரளவு நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் தொடரில் வெற்றி பெற்று சமம் செய்ய வங்கதேச அணி முயற்சிக்கும். எனவே இந்த தோல்வி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சான்டோ விரிவாக கூறும்போது “முதல் மூன்று மணி நேரங்களில் ஹசன், டாஸ்கின் மற்றும் ராணா ஆகியோர் பந்து வீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அதற்குப் பிறகு இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்தனர். புதிய பந்தில் நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம்.

அதையே தற்போது தொடர வேண்டும் என்பது முக்கியமாக உள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ஆக எப்போதும் நான் அணிக்கு நல்ல பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறேன். நான் எனது பேட்டிங்கை ரசித்து விளையாடுகிறேன். முடிவை பற்றி கவலைப்படாமல் எங்களால் முடிந்த வரை சிறப்பாக பேட்டிங் செய்யவும் செயல்முறைகளைப் பின்பற்றவும் முழு பலத்தோடு விளையாடுவதற்கும் விரும்புகிறோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல பேட்ஸ்மேன்களும் அடுத்தது நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:சில வருஷமா 2 விஷயத்தை பிரிச்சிட்டேன்.. முக்கியமா என் டீம்ல அவருக்கு நன்றி சொல்றேன் – அஸ்வின் பேச்சு

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி கான்பூரில் வருகிற 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று வங்கதேச அணி தொடரை சமன் செய்யும் முயலும் என்று எதிர்பார்க்கலாம். அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலை பெற இந்திய அணிக்கு அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

- Advertisement -