கால்பந்து போட்டியை பொறுத்தவரை உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான நாடு ஸ்பெயின் ஆகும். கால்பந்தில் வல்லரசு அணியாக திகழும் ஸ்பெயின் நாடு தற்போது கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் ஸ்பெயின் அணி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட தற்போது வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பா டி20 உலக கோப்பையின் தகுதிச்சுற்றுப் போட்டியின் குரூப் ஏ பிரிவில் 16வது ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கிரீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கி விளையாடிய ஸ்பெயின் அணி 13 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.
இது தற்போது ஸ்பெயின் அணிக்கு 14 ஆவது தொடர்ச்சியான வெற்றியாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு ஸ்பெயின் அணி மலேசியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 13 போட்டிகளை வென்று சாதனை படைத்திருந்தது. இந்த 14 வது வெற்றியை பெற்றதன் மூலம் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் 14 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் அணி படைத்து இருக்கிறது.
மலேசியா மற்றும் பெர்முடா அணிகள் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. எனவே ஸ்பெயின் அணி டி20 வெற்றிகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை முந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் பெண்கள் கிரிக்கெட் அணி 17 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றிருக்கும் நிலையில், அந்த சாதனையை நிகழ்த்த தற்போது ஸ்பெயின் அணி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வெற்றிகள் குறித்து ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் கோரி ரட்ஜர்ஸ் கூறும் போது “இன்று அறிவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான பதிவு இதுவாகும். நாங்கள் சாதனைகளுக்காக எப்போதுமே விளையாடுவதில்லை. ஆனால் இந்த தருணம் தற்போது எங்கள் குழுவிற்கு சிறப்பானதாக உள்ளது. ஸ்பெயினில் சில வருடங்களாக நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எஸ்பானா அணியின் இந்த சாதனைகள் அனைத்தும் வீரர்களையே சேரும்.
இதையும் படிங்க:பாபர் பயிற்சியில ரன் அடிப்பாரு.. அந்த 2 பேர் பையை கட்டி வீட்டுக்கு அனுப்புங்க – பாக் பசித் அலி பேச்சு
அவர்கள் தங்களது நேரத்தை எஸ்பானா அணிக்காக செலவிட்டுள்ளனர். எனவே இனி அடுத்தடுத்து வெற்றிகளை பெற கடினமாக உழைப்போம்.மேலும் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்கள் அனைவரும் இதுகுறித்து பெருமைப்படாமல் தொடர்ச்சியாக முன்னேற வேண்டியது எங்களின் கடமை” என்று கூறி இருக்கிறார்.