நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.இந்த நிலையில் நேற்று இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
இந்தப் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவரிடம் ரஷித் கான் 14வது ஓவரில் தன்னுடைய ஸ்பெல்லின் கடைசி ஓவரையும் வீசி முடித்தது குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது. நேற்றைய போட்டியில் ரஷீத் கான், ரிஷப் பண்ட் விராட் கோலி மற்றும் சிவம் துபே என மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தில் பெரிய நெருக்கடியை இந்திய அணிக்கு உண்டாக்கினார்.
ரஷீத் கான் முதல் மூன்று ஓவர்களில் பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். வழக்கமாக 16வது ஓவருக்கு மேல் தனது கடைசி ஓவரை பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் ரஷீத் கான், நேற்று 14வது ஓவரின் போதே கடைசி ஓவர் வீசி முடித்து விட்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து ரசித்தான் பற்றிய கேள்விகளையே ஆப்கான் தலைமை பயிற்சியாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கு ஆப்கான் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் “நீங்கள் ரஷீத் கானை பேட்டி எடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு இதற்கான பதிலைக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “கேப்டன் பந்துவீச்சு எப்போது முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்ததில், எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் தன்னுடைய கடைசி ஓவரில் இன்னொரு விக்கெட்டையோ அல்லது கடைசிப் பந்தில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டையோ கைப்பற்றியிருந்தால், நாம் அதை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று சொல்லி இருப்போம்.
இதையும் படிங்க : நாளை பங்களாதேஷ்க்கு எதிரான உத்தேச இந்திய பிளேயிங் XI.. துபே ஜடேஜா.. ரோகித் சொன்னதை செய்வாரா?
ரஷீத் கான் தன்னுடைய ஸ்பெல்லை 14வது ஓவரில் முடித்தது எங்களுடைய தோல்விக்கு காரணம் கிடையாது. இதை நான் ஒரு பிரச்சினையாக நினைக்கவே இல்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் வந்து 16வது ஓவரில் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். ரஷித் தான் முடிவில் எனக்கு எந்த கவலையும் இல்லை இதுதான் என்னுடைய பதில்” என்று கூறியிருக்கிறார்.