நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. சி பிரிவில் முதல் சுற்றில் முதல் மூன்று போட்டிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மேலும் இன்று முதல் சுற்றும் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த தோல்வி தங்களை பாதிக்காது என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் கூறியிருக்கிறார்.
இன்று போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் 20 ஓவர்களில் குவித்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 16.2 ஓவரில் 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆப்கானிஸ்தான அணி கடந்த மூன்று போட்டிகளாக தங்களுக்கு எதிராக விளையாடிய மூன்று அணிகளையும் நூறு ரண்களை எட்ட விடவில்லை. ஆனால் இந்த போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பெற்று இருக்கும் பிரம்மாண்ட தோல்வி, அந்த அணி அடுத்த சுற்றில் விளையாடும் பொழுது பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கேப்டன் ரஷித் கான் இடம் கேட்கப்பட்டது.
இது குறித்து பதில் அளித்து பேசிய கேப்டன் ரஷித் கான் “அவர்கள் பவர் பிளேவில் மட்டும் 90 ரன்கள் எடுத்தார்கள். அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம். ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் அவர்களை சிறப்பாக இழுத்துப் பிடித்தோம். அவர்களை 200 ரன்கள் எட்ட விடாமல் தடுத்தது மிகவும் சிறப்பான ஒன்று. மீண்டும் இது போன்ற நிலை வராது என்று நம்புகிறேன். இப்படியான சூழ்நிலையில் நீங்கள் அதிக பரிசோதனைகளை செய்யக்கூடாது. உங்களுடைய பலத்தில்தான் இருக்க வேண்டும். நான் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசுவேன் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : ஆப்கான்கிட்ட ஆட எங்க ஆளுங்க துடிச்சிட்டு இருந்தாங்க.. நான் அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன் – ரோமன் பவல் பேச்சு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டிய மிக முக்கியமான வேலையை செய்து விட்டோம். எனவே நாங்கள் இதற்கு அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களுக்கு தகுந்தார் போல் எங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவோம். இந்த தோல்வி எங்களுக்கு இப்பொழுது வந்திருக்கிறது வாழ்வா சாவா போட்டியில் வரவில்லை.இந்த போட்டியில் எங்களுடைய மிடில் ஓவர் பந்துவீச்சு பீல்டிங் மற்றும் நூர் அகமது ஸ்பெல் போன்ற பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.