ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் காரணங்களைக் கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுப்பார் என எல்லோரும் நினைத்திருந்தார்கள். புள்ளி விபரங்களும் பந்துவீச்சை தேர்ந்தெடுப்பதே சரி என இருந்தது. ஆனாலும் இந்திய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் முடிவு தவறு என்பது போல ஆடுகளம் மெதுவாக இருந்தது. மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சிவம் துபே என தொடர்ந்து வெளியேறினார்கள். கேப்டன் ரஷித் கான் உள்ளே வந்து முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்.
ஆனாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி இந்திய அணி 181 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருந்தார்கள். இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக அசமத்துல்லா ஓமர்சாய் மட்டுமே 26 ரன்கள் எடுத்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தோல்விக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் “இந்த ஆடுகளத்தில் 170 முதல் 180 ரன்கள் எடுக்கக்கூடியதாக தெரிந்தது. பெரிய அணிக்கு எதிராக இந்த டார்கெட்டை எங்களால் சேஸ் செய்ய முடியும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்த போட்டியை வென்று இருக்க முடியும். இப்படியான போட்டிகளுக்கு முக்கிய தேவை சரியான மனநிலைதான்.
இதையும் படிங்க : இவரை மட்டும் நான் பொறுப்பா யூஸ் பண்ணனும்.. மனுஷன் என்ன கொடுத்தாலும் செய்யறாரு – ரோகித் சர்மா பேட்டி
நான் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். தற்பொழுது என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. நான் சரியான ஏரியாக்களில் பந்தை வீசி வருகிறேன். ஆனாலும் இங்கு ஆட்டத்தின் முடிவுதான் முக்கியமானது. நாங்கள் விளையாடிய எல்லா இடங்களிலும் ரசித்து விளையாடினோம். கண்டிஷன் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அதை வைத்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பயன்படுத்தி விளையாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.