இந்தியா ஆஸிக்கு எச்சரிக்கையா?.. நாங்க இத செஞ்சா.. யாரும் எங்ககிட்ட நிக்க முடியாது – ஆப்கான் கோச் பேட்டி

0
157
Trott

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தலான திறமையை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் முதல் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் ஒரு போட்டியில் அந்த அணி விளையாட வேண்டி இருக்கிறது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் அணியின் வலிமை குறித்து பேசி இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே உலகக்கிரிக்கெட்டில் குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. அந்த அணி சில பெரிய அணிகளுக்கு எதிரான முதல் வெற்றிக்காக பல காலங்கள் காத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக முதல் வெற்றியை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்தது. அங்கிருந்து ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் நம்பிக்கையோடு காணப்பட்டது.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. மேலும் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறவும் தகுதியான அணியாகக் காணப்படுகிறார்கள். மேலும் அடுத்த சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெறும் குழுவில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறும் பொழுது “நாங்கள் எங்களை திறமையானவர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட் விளையாடும் பொழுது யாரையும் வீழ்த்துவோம். நாங்கள் இன்னும் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. மேலும் நாங்கள் வேலை செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த சில நாட்களில் முக்கிய தோற்கடிப்பதற்கான வாய்ப்புகளை கொண்டு வருவோம்.

இதையும் படிங்க : ஹேசில்வுட்கிட்ட விசாரிச்சிட்டேன்.. நாங்க தப்பு பண்ண மாட்டோம் நம்புங்க – பாட் கம்மின்ஸ் விளக்கம்

எங்களுக்கு சக்தி வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் ஒரு ஆட்டம் மீதி இருக்கிறது. அவர்கள் மோசமான நிலையில் இருந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை வென்றார்கள். ஒரு உலகக் கோப்பை தொடருக்கு வந்து மூன்று போட்டிகளை தொடர்ந்து வெல்வது சிறந்த உணர்வைத் தருகிறது. ஆனால் நாங்கள் இன்னும் எதையும் வெல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -