ஹைடன் சாட்சி.. நான் ரிட்டையர்டு ஆக காரணம் லக்ஷ்மணன்தான்.. 100வது டெஸ்ட் கனவா போச்சு – ஆடம் கில்கிறிஸ்ட் பேச்சு

0
958
Gilchrist

கிரிக்கெட் உலகின் சாதனை விக்கெட் கீப்பரான ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதற்கு இந்திய வீரர் லக்ஷ்மன் காரணமாக அமைந்தார் என்று கூறியிருக்கிறார்.

ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா அணிக்காக மொத்தம் 96 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் உடன் 5570 ரன்கள் குவித்திருக்கிறார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்தவராக இருக்கிறார்.

- Advertisement -

மாற்றமாக அமைந்த 2008 ஆம் ஆண்டு போட்டி

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக அடிலைடில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த டெஸ்ட் போட்டியில் லக்ஷ்மன் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். மேலும் சச்சின் கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டிருந்தார்.

இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும் பொழுது “கடைசியாக இந்திய அணிக்கு எதிராக நான் விளையாடிய பொழுது வேடிக்கையான விஷயங்கள் நடைபெற்றது. நான் பிரட் லீயின் பந்துவீச்சில் கேட்ச் எடுக்க முயற்சி செய்தேன். அதற்கு முந்தைய நாள் என் மனைவியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் இரவு பேசிக்கொண்டு இருந்தேன். அதற்கு அடுத்து எங்களுக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சுற்றுப் பயணம் இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -

ஹைடனிடம் உடனே சொன்னேன்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அந்த வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் என்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் எண்ணிக்கை 99 ஆக உயரும். இதற்கடுத்து நாங்கள் இந்தியாவிற்கு செல்வோம். அங்கு நூறாவது டெஸ்ட் போட்டி வந்திருக்கும். நான் சில உயரடுக்கு ஆஸ்திரேலியா வீரர்களின் பட்டியலில் இணைந்திருப்பேன்”

இதையும் படிங்க: சிக்ஸ் அடிச்சாலும் கவலை இல்லை.. ரிஷப் பந்த் கிரீசில் இருந்தா என்னோட திட்டம் இது தான் – நாதன் லயன் பேட்டி

“அடுத்த நாள் நான் லக்ஷ்மன் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை தவற விட்டு விட்டேன். அந்தக் காட்சி மீண்டும் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் வந்து கொண்டே இருந்தது. அனேகமாக ஒரு 32 முறை வந்திருக்கும். நான் உடனே அருகிலிருந்த ஹைடன் இடம் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நான் அவுட் ஆகிவிட்டேன் அவ்வளவுதான் ஓய்வு பெற போகிறேன்’ என்று கூறிவிட்டேன். அந்தப் பந்து பேட்டில் பட்டு என்னுடைய கையுறையில் படுகின்ற ஒரு நொடி நேரம்தான் நான் ஓய்வு பெற முடிவு செய்த நேரம். பிறகு நான் இந்திய சுற்றுப்பயணத்தை பற்றி கவலைப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -