சென்னை டெஸ்ட்.. கருப்பா சிவப்பா?.. பங்களாதேஷ் அணிக்கு காத்திருக்கும் ஆச்சரியம்.. ரோகித் புது வியூகம்

0
301
Ict

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பங்களாதேஷ் அணிக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுக்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

தற்பொழுது பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் பேட்டிங் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு என மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை இரண்டு போட்டிகளிலும் வீழ்த்தி தொடரை வென்று ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

எச்சரிக்கை அடைந்திருக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பங்களாதேஷ் அணியின் செயல்பாட்டை பார்த்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில விஷயங்களில் எச்சரிக்கை அடைந்திருக்கிறது. பங்களாதேஷ் அணி மெதுவான ஆடுகளங்களில் விளையாட நல்ல முறையில் தேர்ச்சி அடைந்து வந்திருப்பதை புரிந்திருக்கிறது.

எனவே பங்களாதேஷ் அணிக்கு மெதுவான ஆடுகளத்தை கொடுக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தெரிய வருகிறது. இதற்காக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் சென்னையில் பங்களாதேஷ் அணிக்கு இந்த கிரிக்கெட் நிர்வாகம் ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

கருப்பு மண்ணா? சிவப்பு மண்ணா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பான்மையாக கருப்பு மண்ணால் ஆன ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையான ஆடுகளம் அமைப்பில் களிமண் அதிக அளவு சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் ஆடுகளம் மெதுவாக காணப்படும். மேலும் முதல் நாளில் இருந்தே பந்து சுழல் பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கும்.

அதே சமயத்தில் சிவப்பு மண்ணால் உருவாக்கப்படும் ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் கிடைக்கும். எனவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலைமை காணப்படும். அதே சமயத்தில் முதல் இரண்டு நாட்கள் தாண்ட ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும். இதனால் இறுதிக்கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்களும் போட்டிக்குள் வருவார்கள்.

இதையும் படிங்க : அது நடந்தா மட்டுமே.. இந்திய அணிக்கு திரும்பி வருவேன்.. இல்லனா மாட்டேன் – ஷமி கம்பீருக்கு ஸ்பெஷல் மெசேஜ்

இந்த நிலையில் வழக்கமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு மண்ணால் உருவாக்கப்படும் ஆடுகளம் இந்த முறை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அமைக்கப்படாது என கூறப்படுகிறது. பதிலாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சிவப்பு மண் ஆடுகளத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை காட்டும் பொழுது ஆச்சரியம் காத்திருக்கிறது!

- Advertisement -