அது நடந்தா மட்டுமே.. இந்திய அணிக்கு திரும்பி வருவேன்.. இல்லனா மாட்டேன் – ஷமி கம்பீருக்கு ஸ்பெஷல் மெசேஜ்

0
381
Shami

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பெயர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து முகமது ஷமி முக்கியமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் காலில் இருந்த காயத்திற்கு ஊசி போட்டுக் கொண்டு அணிக்காக விளையாடியது அவரை பெரிய அறுவை சிகிச்சைக்கு கொண்டு விட்டது. தற்பொழுது அறுவை சிகிச்சை முடிந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டாலும், இந்திய அணிக்கு எப்பொழுது திரும்புவார் என்பது தெரியாமலே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது ஷமியின் முக்கியத்துவம்

பந்து வீசும் பொழுது ஆடுகளத்தில் பந்தின் தையல் நேராக சென்று தாக்கும் பொழுது, பந்து எந்த பக்கம் நகரும் என்று பேட்ஸ்மேனால் கணிக்கவே முடியாது. மேலும் இதை பந்துவீச்சாளராலும் கணிக்கவே முடியாது. இந்த வகையில் முகமது ஷமி பந்து வீசும் பொழுது, பந்தின் தையல் கொஞ்சமும் ஆடாமல் நேராகச் சென்று ஆடுகளத்தில் மோதி, பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.

இதன் காரணமாக உலக கிரிக்கெட்டில் தனித்துவமான வேகப்பந்துவீச்சாளராக அவர் இருந்து வருகிறார். குறிப்பாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய தேவை இந்திய அணிக்கு நிறைய இருக்கிறது. எனவே அவர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

கம்பீருக்கு ஏற்பட்ட கலக்கம்

இந்த நிலையில் தான் எப்பொழுது அணிக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கும் முகமது ஷமி கூறும் பொழுது ” நான் இந்திய அணிக்கு சீக்கிரத்தில் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நான் நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்து வருகிறேன் என்பதை அறிவேன். ஆனால் திரும்பி வரும் பொழுது என் மனதில் எந்தவிதமான சந்தேகமும் உடல் தகுதி குறித்து இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நான் வலிமையாக திரும்பி வருவதை விரும்புகிறேன். ஏனென்றால் அப்போதுதான் மீண்டும் காயமடையும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

இதையும் படிங்க : இந்திய பயிற்சியாளர் வாய்ப்பு.. மனைவி கிட்ட கூட சொல்லல.. அவருக்குத்தான் போன் செய்தேன் – மோர்னே மோர்கல் பேட்டி

எனவே நான் பங்களாதேஷ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த தொடருக்கு திரும்பினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நான் ஏற்கனவே பந்து வீச ஆரம்பித்து விட்டேன். ஆனால் நான் முன்பே சொன்னது போல நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் மட்டுமே நான் இந்திய அணிக்கு திரும்பி வர விரும்புகிறேன். ஒருவேளை அந்த நிலையை நான் எட்டவில்லை என்றால் நான் வர முடியாது” என்று கூறியிருக்கிறார். முகமது ஷமி இவ்வளவு தைரியமாக கருத்து வெளியிட்டிருப்பது, முக்கிய வீரர்களை திரும்பிப் பெற வேண்டிய நெருக்கடிகள் இருக்கும் கம்பீருக்கு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -