அபிசேக் நாயர் நீக்கத்திற்கு விராட் கோலி காரணமா? வெளியான புதிய தகவல்

0
29

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருந்த அபிஷேக் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் அபிஷேக் நாயர் பலியாடாக்கப்பட்டிருக்கிறார்.இது தற்போது பலவிதமான விவாதத்தை ஏற்படுத்திவிட்டது.

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பின் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கு அபிஷேக் நாயர் பங்கு மிகவும் முக்கியம் என்று கூறப்பட்டது. இந்த தருணத்தில் அபிஷேக் நாயர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

- Advertisement -

அபிசேக் நாயர் காரணம் என்ன?

இது குறித்து தற்போது வெளியான தகவலில், அபிஷேக் நாயர் நீக்கப்பட்டதற்கு சீனியர் வீரர்களுடன் அவர் சரியான உறவு வைத்துக் கொள்ளாததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களிடம் அபிஷேக் நாயர் பிரபலமாக இருந்திருக்கிறார்.

ஆனால் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் அபிஷேக் நாயருக்கு நல்ல உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அபிஷேக் நாயர் பணி குறித்து கருத்து கேட்கப்பட்டபோது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தவறான கருத்தை கூறியதால் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது.

- Advertisement -

காப்பாற்றாத கம்பீர்:

அபிஷேக் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு கம்பீர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் தற்போது அபிஷேக் நாயர் விவகாரத்தில் கம்பீரும் அவரைக் காப்பாற்றாமல் அமைதியாக இருந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டது தவறான முடிவு.

இதையும் படிங்க: சிஎஸ்கே-ல் இணைகிறார் தென் ஆப்பிரிக்க இளம் சூப்பர் ஸ்டார்.. தமிழக வீரர் ரூல்ட் அவுட் – யார் இந்த குட்டி டிவில்லியர்ஸ்

  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதற்காகவது அபிஷேக் நாயரை அணியில் வைத்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் டெஸ்ட் க்கு ஒரு பயிற்சியாளர் குழு ஒரு நாள் போட்டிக்கு ஒரு பயிற்சியாளர் குழு என்பதை நியமிக்கும் முடியாது என்பதால் தான் அபிஷேக் நாயரை பிசிசிஐ நீக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுபோன்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்போது கோடாக் தொடர்ந்து நீடிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -