ப்ளீஸ் விராட் கோலிய முடிச்சு விட்டுறாதிங்க.. அவருக்காக இத மட்டும் செய்யுங்க – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை

0
214
Virat

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி குறித்து ஏ பி டி வில்லியர்ஸ் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை இந்திய அணி நிர்வாகத்திற்கு வைத்திருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று விராட் கோலிக்கு சிறப்பாக அமையவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள அவர் மொத்தம் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் அமெரிக்க அணிக்கு எதிராக அவர் கோல்டன் டக் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் தொடக்க வீரராக வரலாமா வேண்டாமா? என்பது குறித்தான விவாதங்கள் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டு வருகிறது. தற்பொழுது ஏபி டிவில்லியர்ஸ் தன் நண்பரான விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து மிகவும் கவலை தெரிவித்து இருக்கிறார்.

உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகளை மனதில் வைத்து, பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்த விராட் கோலியை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை விளையாடினால் உலகக் கோப்பையை கைப்பற்றலாம் என்றும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “தயவுசெய்து விராட் கோலியை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய விடுங்கள் என்று தான் நான் எப்பொழுதும் கூறுவேன். தற்போது அவர்கள் பேட்டிங் செய்ய இருக்கும் விக்கெட்டுகளில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவரால் ஆட்டத்தை எடுத்துச் செல்லவும் முடியும், தேவைப்பட்டால் அதிரடியாக விளையாடவும் முடியும். எனவே அவர் அந்த இடத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க : இனி இப்படித்தான் முடிவு பண்ணிட்டேன்.. அதான் அவரை கூட்டிட்டு வந்தேன் – ஜோஸ் பட்லர் பேச்சு

இந்திய அணியை பொறுத்தவரை முதல் பன்ச் அவர்களுடையதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்கள் கடந்த காலங்களில் மரபு ரீதியாக விளையாடிய, உலகக் கோப்பையில் எப்படி விளையாட வேண்டும் என்கின்ற சரியான புரிதலுக்கு வந்திருக்கிறார்கள். ஒரு அணியாக அவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து வேகத்தைப் பெற்று அதிரடியாக விளையாட வேண்டும். அப்படி அவர்கள் ஆரம்பித்து விளையாடினால் அவர்களை தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -