ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த அணியில் இருந்து யார் எந்த இடத்தில் விளையாட வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் ரிசர்வ் வீரர்கள் இடத்தில் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இடம் பெற்று இருக்கிறார்.
இதற்கு அடுத்து விராட் கோலி துவக்க இடத்தில் விளையாட முடிந்தவராக இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக ஆர்சிபி அணிக்கு விளையாடி 600க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் மிகக் குறிப்பாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 155 என்று மிகச் சிறப்பாக இருக்கிறது.
எனவே விராட் கோலி ரோஹித் சர்மா உடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என பரவலான கருத்துக்கள் இருந்து வருகிறது. இதனால் ஜெய்ஸ்வால் தன்னுடைய இடத்தை இழப்பதற்கான சூழ்நிலையும் காணப்படுகிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்பொழுது “ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலி டி 20 உலகக் கோப்பை இந்திய அணி இடம் பெறுவாரா? என்கின்ற பேச்சுகள் இருந்தது. ஆனால் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு விராட் கோலியால் சென்று வேலை செய்ய முடியும். தற்பொழுது அவர் தன்னுடைய வாழ்க்கையில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் ரன் சேஸ் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவர் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையில் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் வரவேண்டும்.
இதையும் படிங்க : இந்த ஐபிஎல்ல.. பெஸ்ட் கேப்டன் இந்த பையன்தான்.. பதட்டப்பட்டு பார்க்கவே இல்ல – ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு
பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் அவர் கொடுக்கும் நிலைத்தன்மையின் காரணமாக அவரைச் சுற்றி மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியும். அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அதிரடி துவக்கத்தை கொடுக்க முடியும். ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து அதிரடியான துவக்கத்தை கொடுப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.