பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்; குஜராத் அணிக்கு திரும்பும் பாரின் பிளேயர்!

0
17088
Ipl2023

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக 13 ஆட்டங்களில் ஒன்பது வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

இதேபோல் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் முதல் அணியாக பிளே ஆப் சுற்றிக்குள் நுழைந்ததோடு இல்லாமல், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தது!

- Advertisement -

வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெறுவதற்கான தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை அணி உடன் குஜராத் மோத இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு குஜராத் அணியில் இடம் பெற்று இருந்த அயர்லாந்து இடதுகை வேகபந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில் மீண்டும் குஜராத் அணிக்குத் திரும்புகிறார்.

குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த இவர் ஐபிஎல் தொடரின் பாதியில் அயர்லாந்து அணி பங்களாதேஷ் அணியுடன் பங்களாதேஷ் நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட, அந்தத் தொடரில் நாட்டுக்காக விளையாட கிளம்பினார். தற்பொழுது அந்தத் தொடர் முடிவடைந்து, இப்பொழுது மீண்டும் குஜராத் அணிக்குத் திரும்புகிறார்.

- Advertisement -

குஜராத் அணி விளையாடிய முதல் பத்து போட்டிகளில் 8 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஜோசுவா லிட்டில் 8 போட்டியில் விளையாடி 12 எக்கானமியில் ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இவர் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சில் ஆட்டத்தின் எந்தப் பாகத்தில் கேப்டன் பந்தைக் கொடுத்தாலும் வீசக்கூடியவராக இருப்பது அந்த அணிக்குப் பெரிய பலம். மேலும் இவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதும் முக்கியமானது.

இவரது வருகை ஏற்கனவே பலமாக இருக்கும் குஜராத் அணியின் பந்துவீச்சு பலத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே அணிக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கும்!