மேட்ச் பார்க்க போனா லவ்வர்ஸ் கிடைப்பாங்களா? கல்யாண மாலையாக மாறிய சேப்பாக்கம் மைதானம்.. காதலனை தேடிய காதலி

0
439

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு கல்யாண மாலை போல் மாறி வருகிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ஒருவர், தன் காதலனை தேடி வருகிறார்.

என்ன டா எனக்கு 20 உனக்கு 18 படத்தின் கதை போல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா. ஆம், நிஜத்தில் நடப்பது தானே சினிமாவிலும் வருகிறது. சிஎஸ்கேவும், கொல்கத்தா அணியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.

- Advertisement -

இதில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி, தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கால்குலேட்டர் கையுமாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், பெண் ரசிகை ஒருவர் தனது காதலனை தேடி வருகிறார். சிஎஸ்கே, கேகேஆர் போட்டியை பார்த்த பெண் ஒருவர் டிவிட்டரில் ஒரு போஸ்ட் போட்டு, அது தற்போது வைரலாகி விட்டது.

அதாவது அந்தப் பெண் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கேகேஆர் விளையாடிய ஆட்டத்தை பார்த்ததாகவும், அப்போதுஐ கேலரியில்,  Y வரிசையில் அமர்ந்திருந்த போது,   X வரிசையில் ஒரு அழகான பையனை பார்த்ததாகவும், அந்த பையன் சீட்டு எண் 30 லிருந்து 60 குள் தான் அமர்ந்திருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த பையனை டிவிட்டரில் உள்ளவர்கள் தான் தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த பையன் சிஎஸ்கே அணியின் ஜெர்சியும், கருப்பு வெள்ளை நிறத்தில் ஷாட்சும் போட்டு இருந்ததாகவும் , இருவரும் பல பலமுறை பார்த்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த பதிவு வைரலாக, சிஎஸ்கே டிவிட்டர் பக்கமே இதற்கு ரிப்ளே கொடுத்துள்ளது அதில் தங்களுடைய மேட்ச் தான் நினைத்தபடி நடக்கவில்லை உங்களுடைய மேட்ச் ஆவது நன்றாக அமையட்டும் என்று சிஎஸ்கே பதிவிட்டுள்ளது. அதற்கு அந்தப் பெண் நீங்கள் என்னை அடுத்த போட்டிற்கு டிக்கெட் கொடுத்தால், நான் அந்தப் பையனை தேடி கண்டுபிடித்து விடுவேன் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு பலரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை டேக் செய்து இந்தப் பையனா என கேட்டு வருகிறார்கள். ஒரு சிலர் அந்தப் பெண் பிரபலமாவதற்காக இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கலாம் என்றும் விமர்சித்து இருக்கிறார்கள்.