இந்திய அணி ரொம்ப பலவீனமா இருக்கு.. அவரை கட்டாயம் அணியில் சேருங்க.. 2027 WC ரொம்ப சிக்கல் ஆயிடும் – முகமது கைப்

0
54

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை முதன் முறையாக இந்தியாவில் கைப்பற்றி அசத்தியது.

இந்த சூழ்நிலையில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி அவரை கட்டாயம் அணியில் சேர்க்க வேண்டும் என்று முகமது கைப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தூரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்த போதும் சிறப்பாக விளையாடி 337 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் இந்தியா பந்துவீச்சாளர்கள் விக்கட்டுகள் வீழ்த்திய போதும் அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி வீரர்களை வீழ்த்த இந்திய அணியினர் தடுமாறினார்கள்.

மேலும் சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அப்போதுதான் இந்திய அணிக்கு விரைவாக விக்கெட்டுகள் கிடைக்கும் என்று முகமது கைஃப் வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது “2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தியின் பெயர் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குல்தீப் யாதவுக்கு மோசமான நாட்கள் இருக்கலாம். ஆனால் வருணை பொறுத்தவரை மோசமான நாட்கள் என்பது மிகவும் அரிதான ஒன்று.

அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியும் இது ஒரு சிறப்பான கூட்டணியாக இருக்கும். வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் அவர் மிகவும் சிறந்து விளங்கி வருகிறார். இதனால் அவர் ஒரு நாள் அணியிலும் விளையாட வேண்டும். உங்கள் பிளேயிங் லெவன் பலவீனமாக உள்ளது. எனவே அவரை நிச்சயம் அணியில் சேர்க்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -