இந்தியாவில் ஐபிஎல் தொடர் வெற்றி அடைந்ததும் உலகெங்கும் கிரிக்கெட் வாரியங்கள் தனி டி20 லீக்குகள் நடத்துவது போல, இந்தியாவிலும் மாநில கிரிக்கெட் அசோசியேஷன்கள் தனிப்பட்ட டி20 லீக்குகளை நடத்தப்பட்டன. இந்த வகையில் இன்று உத்தர பிரதேஷ் பிரமியர் லீக் துவங்கியது. முதல் போட்டியிலேயே ரிங்கு சிங் அணி 9 ஓவரில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
உத்தரப்பிரதேஷ் பிரிமியர் டி20 லீக் தொடருக்கு இது முதல் வருடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்துதான் சிஎஸ்கே அணிக்கு முகமது ரிஸ்வி தேர்வு செய்யப்பட்டு ஏலத்தில் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டி
இன்று இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் காசி ருத்ராஸ் அணியும், மீரட் மாவேரிக்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற காசி ருத்ராஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது.
நடப்பு சாம்பியன் காசி ருத்ராஸ் அணிக்கு இந்த முறை முதல் போட்டி சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணிக்கு அதிகபட்சமாக அல்மாஸ் ஷாகட் 22 பந்தில் 25 ரன்கள், கன்சியாம் யுபாத்யாய் 33 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 19.2 ஓவரில் 100 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. மீரட் மார்விக்ஸ் அணி பந்து வீச்சு தரப்பில் யாஸ் கார்க் மற்றும் ஜீசன் அன்சாரி தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
அனாசமாக வென்ற ரிங்கு சிங் அணி
இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மீரட் மாவேரிக்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அக்சய் துபே 14 பந்தில் 19 ரன்கள் எடுக்க, இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்வஸ்திக் சிகாரா 26 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர் உடன் 66 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : ஜாகீர் கான் பிரெட் லீ இல்லை.. அழகான பவுலிங் ஆக்சன் கொண்ட பவுலர் இவர்தான் – ஸ்டெய்ன் தேர்வு
வெற்றி எளிதான நிலையில் மாதவ் கௌஷிக் 6 பந்தில் 5 ரன்கள், கேப்டன் ரிங்கு சிங் தோனி ஸ்டைலில் சிக்ஸர் உடன் ஃபினிஷ் செய்து 7 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க, மீரட் மாவேரிக்ஸ் அணி வெறும் ஒன்பது ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் காசி ருத்ராஸ் அணியை தோற்கடித்தது.