இந்திய கிரிக்கெட்டில் தற்சமயம் சர்ச்சைக்குரிய வீரராக இஷான் கிஷான் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் பிசிசிஐ உடன் அவர் பிரச்சனையை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் சந்தேகமாக தெரிவிக்கின்றன.
தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு இடம் கிடைப்பது என்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. ஏனென்றால் முன்பு போல் இல்லாமல் இளம் திறமைகள் நிறைய வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஒரு முறை இந்திய அணியை விட்டு வெளியேறினால் மீண்டும் உள்ளே வருவது பெரிய சிரமமாக மாறியிருக்கிறது.
மன வெறுமை பிரச்சனை
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருந்த பொழுது மனவெறுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் அணியை விட்டு விலகுகிறேன் என இஷான் கிஷான் விலகி வந்தார். ஆரம்பத்தில் இது மிகவும் இயல்பான ஒன்றாக தெரிந்தது.
பிறகு இஷான் கிஷான் ரஞ்சி தொடரின் கால் இறுதி போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்ட் அணிக்கு விளையாட செல்லவில்லை. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகவும் கோபமடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவரை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கினார்கள். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய விக்கெட் கீப்பராக துருவ் ஜுரலை அதிரடியாக கொண்டு வந்தார்கள்.
துலீப் டிராபியில் ஏமாற்றம்
இந்த நிலையில் பிசிசிஐ உடன் மீண்டும் சமரசம் ஏற்பட்டு இஷான் கிஷான் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடிவு செய்தார். இதன் காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய புச்சிபாபு டெஸ்ட் தொடரிலும் ஜார்க்கண்ட் அன்னிக்கு கேப்டனாக வந்து பங்கேற்றார்.
இதையும் படிங்க : ரோகித் விராட் சொல்றதுதான் சரி.. WTC பைனல் இப்படித்தான் நடக்கணும் – ஆஸி நாதன் லயன் அறிவிப்பு
இந்த நிலையில் தற்பொழுது துலீப் டிராபி டி அணியில் இடம் பெற்று இருக்கும் இஷான் கிஷான் முதல் சுற்றில் விளையாடாமல் போகலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து இன்னும் ஏதும் வெளிவரவில்லை. மீண்டும் பிசிசிஐ உடன் பிரச்சனையா என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. ஒரு வேலை செய்து உண்மை என்றால், அது அவருக்கு பெரிய பின்னடைவாக அமையும்!