இந்த ஆண்டு துலீப் டிராபி சீசன் செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் துவங்குகிறது. இதில் சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய அணிக்கு சிறந்த பிளேயிங் லெவன் எதுவாக இருக்கும் என்று பார்க்கலாம்.
தற்போது துலீப் டிராபிக்கு ஏபிசிடி என நான்கு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு அணிகள் ஆறு மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு அணிகளுக்கும் முறையே சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டனாக இருக்கிறார்கள்.
கேப்டன் ருதுராஜ்
இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களுக்கு இரண்டு அணிகளிலும் ஒதுக்கப்பட்ட ருதுராஜுக்கு துலீப் டிராபியில் கேப்டன் பொறுப்பு கொடுத்தது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் இருப்பார்கள்.
தமிழக அணியில் இருந்து 3 வீரர்கள்
மூன்றாவது இடத்தில் கேப்டன் ருதுராஜ் மற்றும் நான்காவது இடத்தில் நட்சத்திர அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஆடியோ வரலாம். ஐந்தாவது இடத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் தமிழகத்தின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பாபா அபராஜித் இடம் பெறுவார். ஆறாவது இடத்தில் இன்னொரு விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் விளையாடலாம்.
இந்த அணியில் பந்துவீச்சாளர்களாக ஆப் பின் ஆல் ரவுண்டர் ஹிருத்திக் சோக்கின் மற்றும் இடது கை சுழல் பந்துவீச்சு மானவ் சுதார் ஆகியோர் இருப்பார்கள். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக வைசாக் விஜயகுமார், தமிழக அணியின் சந்தீப் வாரியர் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
இதையும் படிங்க : நண்பா உன்கிட்ட இத நான் மிஸ் பண்றேன்.. ஆனா அது நிலைச்சு நிக்கும் – விராட் கோலி ஷிகர் தவானுக்கு வாழ்த்து
2024 துலீப் டிராபி சி அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :
சாய் சுதர்ஷன், ரஜத் பட்டிதார், ருதுராஜ், சூரியகுமார் யாதவ், பாபா இந்திரஜித், அபிஷேக் போரல், ஹிருத்திக் சோக்கின், மானவ் சுதார், வைசாக் விஜயகுமார், சந்தீப் வாரியர் மற்றும் உம்ரான் மாலிக்.