இந்திய வீரர் ஷிகர் தவான் நேற்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் டெல்லி மாநில அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் ஒன்றாக சேர்ந்து விளையாடிய விராட் கோலி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
தற்போது 38 வயதாகும் ஷிகர் தவான் மேற்கொண்டு இந்திய அணியில் வாய்ப்பு குறித்து யோசிக்காமல் முன்கூட்டியே தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். வெளிப்படையாக இனி இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு இருக்காது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மாநில அணி
ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி இருவரும் டெல்லி மாநில அணிக்காக ஒன்றாக விளையாடி வந்தவர்கள். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்திய அணிக்காக ஷிகர் தவான் வந்த பொழுது அந்த நட்பு அங்கும் எதிரொலித்தது. பொதுவாக ஷிகர் தவான் கலகலப்பான மனிதர் என்பதால் அவருக்கு மொத்த அணியிலுமே நல்ல ஆதரவு இருந்தது.
இந்த நிலையில் ஷிகர் தவான் தற்பொழுது ஓய்வு முடிவை அறிவித்திருப்பதால், பலரும் விராட் கோலியின் வாழ்த்து என்னவாக இருக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். பலர் நேற்றே வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் விராட் கோலி இன்று தன்னுடைய வாழ்த்தை ஷிகர் தவானுக்கு தெரிவித்திருக்கிறார்.
உங்கள் மாறாத புன்னகையை தவற விடுவேன்
விராட் கோலி தன் வாழ்த்துச் செய்தியில் கூறும்பொழுது “ஷிகர் தவான் உங்களுடைய அச்சமற்ற இந்திய அணிக்கான தொடக்கத்தில் இருந்து நீங்கள் இந்திய அணியின் தொடக்க வீரராக பல நல்ல நினைவுகளை கொடுத்திருக்கிறீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத் திறன் மற்றும் உங்களுடைய அடையாளமாக முகத்தில் இருக்கும் மாறாத புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால்உங்கள் மரபு நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க :
நீங்கள் கொடுத்த நல்ல நினைவுகள் மற்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு நன்றி. எப்போதும் உங்கள் இதயத்தில் இருந்து வழிநடத்துங்கள். களத்திற்கு வெளியே அடுத்து உங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.