தோனியை முதலில் பார்த்ததும் வணங்கியது ஏன்? ஜெய்ஸ்வால்,ருதுராஜ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யம்

0
694

தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி தலைமுறைக்கு தோனி ஒரு துருவ நட்சத்திரமாக விளங்குகிறார். ஒரு ரோல் மாடலாக ஒரு சூப்பர் ஹீரோவாக இளசுகளுக்கு காட்சியளிக்கும் தோனி ஒவ்வொரு போட்டி முடிவிலும் இளம் வீரர்களுக்கு தனது அறிவுரையை வழங்குவார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ருதுராஜ், ஜெய்ஷ்வால் ஆகியோர் தங்களுக்குள் நடத்திய உரையாடல் வீடியோவில் தோனி குறித்து பேசி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் இளம் நம்பிக்கையின் நட்சத்திரங்களாக விளங்கும் இந்த ஜோடி தோனி தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியமாக விளங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து பேசி இருக்கிறார்கள்.

இதில் தோனியை பார்த்தவுடன் நீங்கள் வணக்கம் சொல்லியது ஏன் என்று ருதுராஜ் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால் தான் தோனியை முதலில் பார்த்தவுடன் எனக்கு வாயில் எந்த வார்த்தையும் வரவில்லை.

நான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த தோனியை நேரில் பார்த்தவுடன் எனக்கு மெய் சிலிர்த்தது தோனியை அப்போது பார்த்தது நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். இப்போதும் அதை நினைத்தால் எனக்கு வார்த்தை வரவில்லை என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த ருதுராஜ், என் கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் தோனியின் அறிவுரையை கேட்பதற்காக பல இளம் வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் நான் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள் தோனி உடனே செலவழிக்கிறேன். அப்போது நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன். கிரிக்கெட் மட்டும் அல்ல என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் தோனி துணையாக இருப்பார்.

வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ரன் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் நம்மை எப்படி கையாள வேண்டும் என பல விஷயங்களை தோனியிடம் நான் கற்றுக் கொண்டுள்ளேன் என்று ருதுராஜ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகம் வீரராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.