மீண்டும் உலககோப்பை பைனலா?.. “கவலைப்படாதிங்க இந்தியாதான் ஜெயிக்கும்.. இதான் காரணம்” – ரவி சாஸ்திரி பேச்சு!

0
1612
Ravi

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டிக்கு முன்பாகவே வானிலை அறிக்கையில் முதல் இரண்டு நாட்களுக்கும் மழை அச்சுறுத்தல் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே இதன் காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும், எனவே டாஸ் வென்று பந்து வீசுவது முக்கியம் என்று இரு அணிகளுமே அறிந்திருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு தகுந்த வகையில் இரு அணிகளுமே தங்களது பிளேயிங் லெவனில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இடம் கொடுத்து இருந்தார்கள். இந்திய அணியில் கூடுதலாக ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்று இருந்தார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால், முதல் போட்டியில் வெல்வது அல்லது டிரா செய்வது தொடரை வெல்வதற்கு மிகவும் அவசியம். இப்படியான நிலையில் இந்திய அணி இன்று டாஸ் இழந்தது.

இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்து 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணியால் 208 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றால், 31 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இருந்து வருகின்ற சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மேலும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு சிறிய மருந்தைக் கூட இந்திய ரசிகர்களுக்கு கொடுக்க முடியாது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டி மழையால் 59 ஓவர்கள் உடன் நிறுத்தப்பட்ட பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நம்பிக்கை அளிக்கும் விதமாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “போட்டி இன்னும் முடியவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியா சராசரியான ஒரு ஸ்கோரை தற்பொழுது ஸ்கோர் போர்டில் வைத்திருக்கிறேன். மேலும் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காதான் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தாக வேண்டும். இந்த நிலையில் இந்தியா தங்களிடம் அனல் பறக்கும் வேகம் பந்து வீச்சு இருப்பதை மனதில் வைத்து, நம்பிக்கையுடன் போட்டியில் விளையாட வேண்டும். அப்படி செய்தால் எல்லாம் சரியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்!