காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய இந்திய வீரர்! உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா?

0
5662

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் ஐந்து வெற்றிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது . 10 புள்ளிகளுடன் குஜராத் அணி இரண்டாம் இடத்திலும் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன .

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிவுடன் ஆன தோல்வியின் மூலம் நான்காவது இடத்தில் இருந்த பெங்களூர் அணி ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கி இருக்கிறது . இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஜெய்ப்பூரில் மோத இருக்கின்றன .

- Advertisement -

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களாகவே நிலையான வெற்றி இன்றி தடுமாறி வரும் சண்டே சரஸ் ஹைதராபாத் அணி இந்த வருடமும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது . இதுவரை அந்த அணி ஆடியுள்ள ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது .

டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்தத் தொடரில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது ஹைதராபாத் அணி . இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்க போட்ட வீரர்களில் ஒருவரான ஹாரி ப்ரூக்ஸ் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே சதம் அடித்திருக்கிறார் . எப்போதும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அந்த அணி இந்த முறை பந்துவீச்சிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது .

ஹைதராபாத் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது . அந்த அணியின் ஆல்ரவுண்டரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் ஹாம்ஸ்ட்ரிங் தசைகளில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி அணியுடனான போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட சுந்தர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 15 பந்துகளில் 24 ரங்களையும் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் அவர் போட்டி தொடரில் இருந்து விலகுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது .

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது இது மூன்றாவது முறையாகும் கடத்த 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களின் போது துபாயில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து கைவிரல் காயம் காரணமாக விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை . இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் போதும் காயம் காரணமாக பாதியிலேயே விலகி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர் . இவர் உலக கோப்பை காண இந்தியாவின் உத்தேச அணியும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்திய அணிக்கான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு காயத்திலிருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் ஆடி இருக்கும் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளை எடுத்ததோடு 60 ரண்களையும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது