தோனி மீண்டும் அந்த தவறை செய்வாரா? வேண்டாம் தல! 

0
37

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் லக்னோவை சந்திக்கிறது.  இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணி தங்களது சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் போட்டியில் தோனி எடுத்த சில தவறான முடிவுகளால்தான் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சேவாக் கூட தோனி இதுபோன்ற தவறான முடிவை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டிய ஷேவாக், மோயின் அலியை பந்து வீச பயன்படுத்தாதது தவறு என்று கூறினார். இந்த நிலையில் லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மீண்டும் சிவம் துபேக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குஜராத்துக்கு எதிராக சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருடைய தவறான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 20 ரன்கள் குறைவாக எடுத்து தோல்வியை தழுவ நேரிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிவன் துபேக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சிவன் துபேகு பதில் அண்டர் 19 வீரர்கள் ஷாயிக் ரசித், நிஷாந்த் சிந்து போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று தூசர் டேஸ்பாண்டே மோசமாக விளையாடி வருவதாகவும் அவருக்கு பதில் வெளிநாட்டு வீரரை பிளேயிங் லெவனின் சேர்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடக்க வீரராக பென் ஸ்டோக்சை பயன்படுத்தினால் பிளேயிங் லெவலில் பிரிட்டோரியசை  உள்ளே கொண்டு வர முடியும் அதனையும் தோனி பரீசிலினை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.