“நான் எதற்கு வெட்கப்பட வேண்டும் “…..? – தனது கேப்டன் பதவி குறித்து விராட் கோலி மனம் திறந்த பேட்டி!

0
542

இந்த வருட ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி அணி கடந்த இரண்டு மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தங்களது பிளே ஆப் தகுதியை கேள்விக்குறியாக்கி இருக்கிறது .

டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் 11 ஆட்டங்களில் 5 வெற்றிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது . நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது . .

- Advertisement -

இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாகும் . கொல்கத்தா அணியுடன் பெற்ற வெற்றியின் மூலம் ரன் ரேட்டிலும் முன்னிலை பெற்ற ராஜஸ்தான் அணி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது . இந்தப் போட்டியின் வெற்றி மற்றும் தோல்வி இரு அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை

பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணிக்காக தான் எடுத்த சில முடிவுகள் தவறுதலாக இருந்தாலும் அதற்காகத்தான் வெட்கப்பட்டதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் . 2014ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக பதவி வகித்தவர் விராட் கோலி .

இவரது தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியது . ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது . இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திய விராட் கோலி தன்னுடைய ஏழு வருட கேப்டன் பதவி காலத்தில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வில்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரைஇறுதி தோல்வி மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தோல்வி என முக்கிய போட்டிகளில் இந்தியா அணி தோல்வி அடைந்து இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் பல தொடர்களை கைப்பற்றியது விராட் தலைமையிலான இந்திய அணி .

- Advertisement -

தனது கேப்டன்ஷிப் பற்றி பேசி இருக்கும் விராட் கோலி தான் கேப்டனாக இருக்கும்போது எந்த முடிவு எடுத்தாலும் அணியின் முன்னேற்றம் மற்றும் வெற்றி ஆகியவற்றை மனதில் வைத்தே முடிவு எடுத்ததாகவும் துணி அளவு கூட அதில் சுயநலம் இருந்ததில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் . தன்னுடைய முடிவுகள் சில நேரம் தவறாக அமைந்திருக்கலாம் அதற்காக நான் வெட்கப்படவில்லை . தோல்வி என்பது வாழ்க்கையில் நடக்கத்தான் செய்யும் . ஆனால் அதில் சுயநலமோ விருப்பு வெறுப்போ எதுவும் இருந்ததில்லை அணியை முன்னேற்ற வேண்டும் என்று ஒற்றை குறிக்கோள் மட்டும் தான் இருந்தது தெரிவித்திருக்கிறார் .

கடந்த 2021 ஆம் ஆண்டின் ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்று லேயே வெளியேறியது . இதனைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டார் . டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியை வழிநடத்த விராட் கோலி விரும்பினார் . ஆனால் பிசிசிஐ நிர்வாகம் ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவரை நீக்கியது இதனைத் தொடர்ந்து டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது