இந்த இரண்டு வீரர்களால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் – ஆரோன் பின்ச் பேட்டி!

0
6493

இந்த இரண்டு இந்திய வீரர்களால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் பேட்டி அளித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருக்கிறது. டி20 தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடந்தது. அதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. 0-1 என தொடரில் பின்தங்கியது.

- Advertisement -

இரண்டாவது போட்டி நாக்பூரில் நடந்தது. மழையால் ஆட்டம் தாமதமானதால், தலா 8 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டபடி, உமேஷ் யாதவ் வெளியே உட்காரவைக்கப்பட்டு பும்ரா உள்ளே எடுத்துவரப்பட்டார். குறைந்த ஓவர் போட்டி ஆதலால், புவி வெளியே பண்ட் உள்ளே என்ற மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய துவக்க ஜோடியில் கேமரூன் கிரீனை(5) அக்சர் படேல் ரன் அவுட் செய்தார். மேலும் மேக்ஸ்வெல்(0) மற்றும் டிம் டேவிட்(2) இருவரையும் அக்சர் படேல் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 15 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுக்க, 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 6 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே வெளியேறினார். இவர்கள் மூன்று பெரும் ஆடம் ஜாம்பாவின் சுழலில் அவுட் ஆகினர்.

- Advertisement -

ஆனால் ஒரு முனையில் விக்கெட் கொடுக்காமல் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர்களாக பறந்தது. 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா(9) ஆட்டம் இழந்து வெளியேறினார். உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் 8வது ஓவரை சந்தித்தார். 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து அடித்து 19.2 ஓவர்களில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில், “இந்த ஆட்டத்தை நான் 5 ஓவர்கள் ஆக இருக்கும் என்று நினைத்தேன். சற்று அதிகமாக சென்றுவிட்டது. ரோகித் சர்மா பேட்டிங்கில் எங்களை ஆதிக்கம் செலுத்தினால், பந்துவீச்சில் அக்ஸர் பட்டேல் மிகச் சிறப்பாக வீசினார். அவரது இரண்டு ஓவர் மிகப் பெரிய வித்தியாசத்தை கொடுத்திருக்கிறது. எங்களது அணியிலும் மேத்யூ வேட் சிறப்பாக பினிஷிங் ரோல் விளையாடினார். தொடர்ந்து அவர் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் அசாத்தியமாக இருக்கிறது. பந்து வீச்சில் ஜாம்பா கூடுதல் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இன்றைய ஆட்டம் திரும்பியது.” என்றார்.