“மோர்கன் மீது எங்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை இருக்கிறது.. ஆனால்..!” – லிவிங்ஸ்டன் கொடுத்த பதிலடி!

0
6944
Morgan

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் சுற்று உடன் தோற்று வெளியேற இருக்கிறது.

உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இங்கிலாந்து உலகக்கோப்பை அணி வெளியிட்ட பொழுது, அந்த அணியை பார்த்து மற்ற கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பயந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது.

- Advertisement -

மேலும் சமீபக்காலத்தில் இங்கிலாந்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் அசுரத்தனமாக பேட்டிங் செய்து வந்தது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 500 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் எடுக்கும் அணியாக இங்கிலாந்து இருக்கும் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் நம்பும் அளவிற்கு அவர்கள் அதிரடியாக விளையாடினார்கள்.

இதே எதிர்பார்ப்போடுதான் அவர்கள் இந்தியாவில் உலககோப்பைத் தொடர் விளையாடுவதற்காக வந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து எதுவுமே இதுவரை சரியாக நடைபெறவில்லை. அவர்கள் தோல்வி அடையும் விதம் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தை பெரிதும் கவலை அடைய செய்திருக்கிறது.

இங்கிலாந்து பந்துவீச்சில் பலவீனமாக இருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களின் பேட்டிங் யூனிட் மிகப்பெரிய பலவீனம் கொண்டதாக இருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அவர்களின் பேட்டிங் யூனிட் மாறி இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து இங்கிலாந்து அணிக்கு 2019 ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இயான் மோர்கன் கூறும் பொழுது “எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்திருக்கும் அணிகளில் இங்கிலாந்து போல் மோசமாக செயல்பட்டு இருக்கும் ஒரு அணியை நான் இதுவரை பார்த்தது கிடையாது. அவர்கள் பயன்படுத்தும் திட்டங்கள் அவர்களுக்கு தோல்விகளை கொண்டு வந்திருக்கிறது. இது நிச்சயமாக டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடம் இருக்கும் மன உறுதி மற்றும் நம்பிக்கை குறித்து கேள்விகளை எழுப்புகிறது!” என்று கூறியிருந்தார்!

தற்பொழுது மோர்கன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் கூறும் பொழுது ” எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் மோகன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நான் அவருக்கு சொல்ல முடியும். தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றுவதற்கு அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் டி20 கிரிக்கெட்டை விட 50 ஓவர் கிரிக்கெட் மிக குறைவாக இருக்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட் வித்தியாசமான விளையாட்டு. நாங்கள் போதுமானவரையில் இந்த வடிவத்தில் விளையாடாததுதான் பிரச்சனைக்கு காரணம்!” என்று கூறி இருக்கிறார்!