கம்பீர் இருக்கட்டும்.. லக்ஷ்மணனை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்.. வெளியான தகவல்கள்

0
388
Gambhir

இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது.மேற்கொண்டு அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் கவுதம் கம்பீருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லட்சுமணனை வைத்து இடைக்கால புதிய திட்டம் ஒன்றை பிசிசிஐ உருவாகியிருப்பதாக, பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை முடித்துக் கொண்டதும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு அடுத்து ஜூலை 6ஆம் தேதி முதல் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதற்கு அடுத்து ஜூலை 27 ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

தற்போது ஜிம்பாப்வே தொடருக்கு புதிய பயிற்சியாளராக கம்பீர் கிடைக்க மாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக விவிஎஸ் லட்சுமணன் இந்தத் தொடருக்கு தலைமை பயிற்சியாளராக இந்திய அணிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. மேலும் அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் துணைப் பயிற்சியாளர்களும் செல்வார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs BAN.. நாளை அரையிறுதிக்கு முக்கிய போட்டி.. மழை வாய்ப்பு போட்டி நடக்குமா?.. வானிலை அறிக்கை

கவுதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களை கம்பீர் பயிற்சியாளராக வழி நடத்துவார், புதிய டி20 அணி உருவாக்கப்படும் என்று ரசிகர்கள் நினைத்து இருந்ததில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -