யோவ் அம்பயர்… நீ என்ன தூங்கிட்டு இருக்கியா? சுப்மன் கில்லுக்கு சர்ச்சையான அவுட் கொடுத்த 3ஆவது நடுவர்! – வறுத்தெடுத்த சேவாக், வாசிம் ஜாபர்!

0
932

ரீ-ப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தும் மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்தது சர்ச்சையில் முடிந்திருக்கிறது. இந்த விவகாரத்திற்காக மூன்றாவது நடுவரை கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர் முன்னாள் இந்திய வீரர்கள் சேவாக் மற்றும் வாசிம் ஜாபர் உள்ளிட்ட சிலர்.

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 173 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 123 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இன்று ஆரம்பத்திலேயே லபுஜானே 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்ததாக மிச்சல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலியா அணை கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலையை கடந்தது. அதன் பிறகு ஸ்டார்க் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் அடித்து எட்டு விக்கெட் இழந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அத்துடன் டிக்ளர் செய்தது. மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

444 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. துவக்க வீரர்கள் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் சுப்மன் கில் போலன்ட் பந்தை எதிர்கொண்டபோது, பந்து எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் நின்ற கேமரூன் கிரீன் பிடித்தார். கேட்ச்சா? இல்லையா? எனும் முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றது. ரீப்ளேவில் பார்த்தபோது பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. அவுட் இல்லை என்று வரும் என பலரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். ரோஹித் சர்மா கில் இருவரும் ஆத்திரம் அடைந்தனர். இதனை பார்க்கமுடிந்தது.

இந்த விவகாரம் தற்போது இணையதளத்தில் சர்ச்சையாகி வருகிறது. வீரேந்திர சேவாக், வாஷிம் ஜாஃபர் உள்ளிட்ட பல முன்னாள் இந்திய வீரர்கள் மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை பின்வருமாறு காணலாம்.