இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரையில் நின்று விளையாடினால் 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க சுலபமாக இருக்கும் என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா வழக்கம் போல் ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் திலக் வர்மா 49 மற்றும் சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தார்கள். இதில் திலக் வர்மா கடைசி வரையில் நின்று விளையாடினார். இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது.
நீண்ட கால காத்திருப்பு
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” அபிஷேக் ஷர்மா தவிர்த்து ஒரு பேட்ஸ்மேன் ரன் அடிப்பதற்காக நாம் இந்த தொடரில் நீண்ட நேரமாக காத்திருக்கிறோம். அதே சமயத்தில் திலக் மற்றும் சஞ்சு இருவரும் பெரிய இன்னிங்ஸ் விளையாடி விடவில்லை. ஆனாலும் அவர்கள் விளையாடிய கேமியோ நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. நேற்று திலக் இறுதிவரையில் விளையாடியதால் இந்திய அணியால் 200 ரன்கள் எட்டுவதற்கு சுலபமாக இருந்தது”
“கடந்த சில ஆட்டங்களை பார்க்கும் பொழுது யாரும் கடைசிவரையில் நின்று போட்டியை முடிக்கவில்லை. ஆனால் நேற்று திலக் கடைசி வரையில் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். மேலும் இறுதிப் போட்டிக்கு முன்பாக சஞ்சு மற்றும் திலக் நல்ல நிலைக்கு திரும்பியது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி. இதனால் இந்திய அணி நல்ல பயனடையும்”
அபிஷேக் ஷர்மா கொண்டாட்டம்
“அபிஷேக் ஷர்மா இதுவரையில் 309 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பவர்களுக்கும் இவருக்கும் 100 ரன்கள் வித்தியாசம் இருக்கும் போல. அவர் நேற்று நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்தார். எல்லா திசைகளிலும் அடித்தார். அவரது கொண்டாட்டம் கூட சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க : ஹர்ஷித் ராணா ஆரம்ப லெவலுக்கு போயிட்டார்.. இந்த மாதிரி தப்பு செய்தா யார் விடுவாங்க? – அஸ்வின் விமர்சனம்
“இந்த ஆட்டத்தில் 200 ரன்கள் எடுப்பார்கள் என யாரும் நினைக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் 100 ரன் எடுத்த காரணத்தினால் 200 ரன் எடுப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் இலங்கை அணிக்கு எதிராக எடுத்தார்கள். இப்படி நாம் 200 ரன்கள் எடுக்கும் பொழுது எதிரணியும் உற்சாகமாகவும் சுதந்திரமாகவும் விளையாடுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






