வீடியோ: என்னையா நடக்குது? கேமராமேனால் கடுப்பான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓனர் காவியா மாறன்!

0
259
20230410_173832

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நேற்றைய நாளின் இரண்டாவது போட்டியாக ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இரண்டு போட்டிகளையும் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலேயே இருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தது. பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிய அந்த அணியை மிகவும் ஒரு மோசமான தொடக்கத்தை சந்தித்தது. பவர் பிள்ளைக்கு முன்பாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவானை தவிர மற்ற எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை.

- Advertisement -

இறுதி வரை பொறுப்புடன் ஆடிய தவானின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி கௌரவபான 143 ரன்கள் 20 ஓவர்களில் குவித்தது. அந்த அணியின் கேப்டன் திவான் 66 பந்துகளில் 99 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய மார்க்கண்டேயா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். உம்ரான் மாலிக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.திரிபாதி 74 ரன்களும் மார்க்கம் 37 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்திருக்கிறது ஹைதராபாத் அணி.

நேற்றைய போட்டி ஹைதராபாத் அணியின் ஹோம் கிரௌண்டான ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியை காண ஏராளமான ஹைதராபாத் ரசிகர்கள் வருகை புரிந்தனர். மைதானம் முழுவதுமே ஆரஞ்சு அருமையாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓனர் காவியா மாறனின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வைரலாகி இருக்கிறது. எல்லா போட்டிகளின் போதும் சுகம் துக்கம் சந்தோஷம் என அனைத்தையும் தனது முக பாவனைகளின் மூலம் வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர்களை வைத்திருப்பவர் காவியா மாறன்.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது விரைவாக விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி இறுதி நேரத்தில் கேப்டன் தவான் சிறப்பான ஆட்டத்தால் ரன்களை குவித்தது அப்போது மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்ட காவியா மாறனை நேரலையின் போது மீண்டும் மீண்டும் பெரிய தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு கடுப்பான அவர் தனது ஏமாற்றத்தையும் என்னை மட்டும் ஏன் படம் பிடிக்கிறீர்கள் என்பது போன்ற செய்கையும் ட்விட்டர் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது இதோ அந்த வீடியோ”