வீடியோ.. 6 ஆண்டுகளுக்கு பிறகு பந்து வீசிய விராட் கோலி.. ஹர்திக் பாண்டியா மோசமான காயம்.. இந்திய அணிக்கு பின்னடைவு!

0
2490
Virat

மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த மைதானம் பொதுவாகவே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒரு மைதானம்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் வேத பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக நசும் அகமத் மற்றும் முகமது ஹசன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடிய அதே அணியுடன் செல்ல இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுத்தது. சர்துல் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்.

பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் இருவரும் பும்ரா மற்றும் சிராஜ் பந்துவீச்சுக்கு மிகவும் கவனத்தைக் கொடுத்து பொறுமையாக விளையாடி 8 ஓவர்களை கடந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஒன்பதாவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். லிட்டன் தாஸ் நேராக அடித்த பந்து ஒன்றை காலால் தடுக்க முயன்று கீழே விழுந்த அவருக்கு முட்டியில் அடிபட்டது. இதற்கு அடுத்து மருத்துவக் குழு உள்ளே வந்து அவருக்கு சிகிச்சை செய்தது. ஆனாலும் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மூன்று பந்துகள் வீசி இருந்த நிலையில் மீதி 3 பந்துகளை வீச கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியை அழைத்தார். விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்துவீச்சுக்கு வந்தார். அவர் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா காலில் முட்டியில் காயம் அடைந்து இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது. இந்த காயம் விரும்பத்தகாத வகையில் இருக்கும் என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் குறைவு ஏற்படும். உலகக் கோப்பையை வெல்வதில் பெரிய சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.