வீடியோ.. விக்கெட்ல எதுவும் இல்ல.. ஆனா என் கையில இருக்கு.. பாபர் அசாமை கிளீன் போல்ட் செய்த சிராஜ்!

0
718
Siraj

உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அதி உச்ச போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இதே மைதானத்தில் விளையாடிய உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அப்துல்லா சபிக்கை 20 ரன்களில் முகமது சிராஜ் எல்பிடபிள்யு மூலம் வெளியேற்றினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் கேஎல்.ராகுல் மூலம் ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அழைத்ததத்தை தாண்டி பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்கொண்டு சென்றது. மேலும் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக பாபர் அசாம் அரைசதத்தை தொட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது ஸ்பெல்லுக்கு முகமது சிராஜை கொண்டு வந்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் தாண்டி அவர் ரன் கொடுத்தார். மீண்டும் இரண்டாவது ஓவருக்கு வந்த சிராஜ் அற்புதமான லைன் மற்றும் லென்த்தில் ஆப் ஸ்டெம்பை தட்டி பாபர் அசாமை கிளீன் போல்ட் ஆக்கினார். பாபர் அசாம் அரை சதம் அடித்த நிலையில் 50 ரன்களில் வெளியேறினார்.

இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் குஜராத் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. இப்படியான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக தற்பொழுது பந்து வீசி வருகிறார்கள். 33 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழந்து இருக்கிறது!