வீடியோ.. “எவ்வளவோ பார்த்திருக்கேன்.. ஆனா இப்படி பார்த்ததில்லைங்க..!” – தினேஷ் உலக கோப்பை போட்டியில் கிரிக்கெட் வர்ணனை!

0
1581
DK

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று 15 வது போட்டியில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று பந்து வீசுவதாக தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் அறிவித்தார். சிறிய மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்யும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பேட்டிங் அனுபவம் இல்லாத நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் உலகத்தரம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தார்கள்.

நெதர்லாந்து அணி 82 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்தது. 140 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்தது. மேற்கொண்டு நெதர்லாந்த அணி 200 ரன்கள் எட்டது என்று நினைத்திருந்த நிலையில், கேப்டன் எட்வார்ட்ஸ் மற்றும் கடைசி கட்ட வீரர்கள் போக்கை மாற்றினார்கள்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் வான்டர் மெர்வ் 29 (19), ஆரியன் தத் 23* (9) ரன்கள் எடுக்க கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 78 ரன்கள் குவித்தார். 43 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 245 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

இந்த போட்டியின் போது ஜெரால்ட் கோட்சி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றி கிளாசன் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பிடித்தார்.

அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் உங்களுக்கு உறுதியா ஒன்னு சொல்றேன். நான் இதுவரைக்கும் கிரிக்கெட்ல நிறைய விஷயம் பார்த்து இருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு விஷயத்தை பார்த்ததே கிடையாது!” என்று சிரித்து நகைச்சுவையாகக் கூறியிருந்தார்!