இது அதுல! ரிசர்வ் டேவால் கலக்கத்தில் சி எஸ் கே ரசிகர்கள்..தோனிக்கும் ரிசர்வ் டேக்கும் இருக்கும் மோசமான பந்தம்

0
822

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் சாம்பியன் பட்டத்தை வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இன்னும் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சிஎஸ்கேவும் குஜராத்தும் மோத இருந்தது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் தண்ணீர் ஊற்றி கெடுத்தது கோடை மழை. மே மாதத்தில் எங்க ஊரில் மழையே பெய்யாது. ஆனால் இன்று மட்டும் எப்படி பெய்கிறது என்ற குழப்பத்தில் அகமதாபாத் வாசிகளே குழம்பி இருக்கிறார்களாம்.

- Advertisement -

இதனால் நேற்று நடைபெற இருந்த போட்டி திங்கட்கிழமை இரவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் டேக்கும் தோனி க்கும் ஆகவே ஆகாது என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டி நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.

இதில் நியூசிலாந்து இந்திய அணிகள் மோதிய  ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டே அன்று நடத்தப்பட்டது. இதில் தோனி முக்கியமான கட்டத்தில் ரன் அவுட் ஆக இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் ஆறாத வடுவாக மாறிவிட்டது. மேலும் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுவாக தான் அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டி ரிசர்வ் டே அன்று நடைபெறுகிறது.

- Advertisement -

இதனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி தழுவ நேரிடும் என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். மேலும் இதேபோல்தான் ரிசர்வ் டேவில் நடைபெற்ற போட்டியுடன் தோனி ஓய்வு பெற்றதால் தற்போது மீண்டும் ஐபிஎலும் அதே மாதிரி நடப்பதால் தோனி இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற்று விடுவார் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யவே வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது திங்கட்கிழமை இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.