“டிராவிஸ் ஹெட்டுக்கு இதை செய்யாம விட்டுட்டோம்” – இந்திய பவுலிங் கோச் புலம்பல்!

0
545
Head

நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி துவங்கியது!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை முதலில் 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சரித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் ஆட்டம் இழக்காமல் 251 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, நாள் முடிவில் 327 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய முன்னிலையில் சென்று விட்டார்கள்.

டிராவிஸ் ஹெட் வந்ததிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 146 பந்தில் 156 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் இவர் கடைசி நேரத்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்துகளுக்கு மிகவும் தடுமாறினார். இவரது பலவீனம் இதுவாக இருக்க இந்தியா இதை ஆரம்பத்திலே செய்யாமல் தவறவிட்டு இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பிரே “அப்படியான பந்துகளை வீசுவது அவருக்கு எதிரான திட்டம் என்று நாங்கள் எப்போதும் உணர்ந்தே இருந்தோம். ஆனால் நீங்கள் சொன்னது போல அதை நாங்கள் கொஞ்சம் முன்பே செய்திருக்க வேண்டும். அதாவது முப்பது நாற்பது ரன்களில்.

- Advertisement -

ஆனால் நீங்கள் கேப்டனை நம்ப வேண்டும். அவர் அவரது உள்ளுணர்வின்படி சென்றார். அப்பொழுது அப்படியான பந்துகள் வீசுவதற்கான சூழ்நிலை இல்லை என்று அவர் நினைத்தார். நான் அதை சற்று முன்னதாகவே செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.

நாங்கள் எடுத்த இரண்டாவது புதிய பந்து சீம் ஆனதைப் பார்த்தோம். அதே சமயத்தில் கட் ஆனது. எனவே நாளை காலை எங்களுடைய முதல் செசன் முக்கியமானதாக இருக்கும். சீக்கிரத்தில் சில விக்கட்டுகளை வீழ்த்தினால் நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!